போதை பொருள் விவகாரம்.. நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவும் கைது..

544005 krishna srikanth 1

போதை பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீகாந்த் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திரையுலக பிரபலங்கள் இதில் சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. குறிப்பாக கழுகு பட நடிகர் கிருஷ்ணாவுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.


இதை தொடர்ந்து கிருஷ்ணாவுக்கு காவல்துறை சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் தலைமறைவான நிலையில், அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று நடிகர் கிருஷ்ணா தனது வக்கீல் மூலம் காவல்துறையிடம் ஆஜரானார்.

நேற்று மாலை முதல் காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதை பொருள் பயன்படுத்திய வழக்கில், அவர் வெளிநாட்டில் இருந்து கொகைனை வாங்கினாரா அல்லது இங்கேயே வாங்கினாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பெசண்ட் நகரில் கலாக்‌ஷேத்ரா காலனியில் உள்ள நடிகர் கிருஷ்ணாவின் வீட்டில் காவல்துறையினர் இன்று காலை 2 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். இதில் வேறு யாருக்கெலாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கிருஷ்ணாவிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் கிருஷ்ணாவின் செல்போனில் 2020 முதல் அழிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாட்ஸ் ஆப் உரையாடலில் நடிகர் கிருஷ்ணா ஒரு சில நண்பர்களுடன் Code Wordல் தகவல் பறிமாற்றம் செய்தது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த Code Word குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது..

இந்த நிலையில் போதை பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் 20 மணி நேரமாக விசாரணை நடைபெற்ற நிலையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் 2வது நபராக கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More : விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை எப்போது..? முதலமைச்சர் ஸ்டாலின் அப்டேட்..!

RUPA

Next Post

உதம்பூரில் பயங்கரவாதிகள் - பாதுகாப்புப் படையினர் இடையே கடும் துப்பாக்கிச்சூடு.. அமர்நாத் யாத்திரைக்கு முன்பு நடந்ததால் பரபரப்பு..

Thu Jun 26 , 2025
அமர்நாத் யாத்திரைக்கு ஒரு வாரம் முன்னதாக, இன்று ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டது. ஆபரேஷன் பிஹாலி என்ற குறியீட்டு பெயரிடப்பட்ட இந்த என்கவுண்டர் பற்றிய தகவலை பாதுகாப்புப் படையினர் பகிர்ந்து கொண்டனர், இந்த நடவடிக்கை தற்போது பிஹாலி பகுதியில் நடந்து வருவதாகக் கூறினர். எனவே இந்த இடத்தின் பெயரே இந்த நடவடிக்கைக்கு பெயரிடப்பட்டது. ராணுவம் மற்றும் காவல்துறையினரின் கூட்டு நடவடிக்கையின் இந்த […]
Encounter

You May Like