போதை பொருள் வழக்கு.. நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பிய காவல்துறை..

122022814

போதை பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீ காந்த் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இந்த வழக்கில் 3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கானா நாட்டை சேர்ந்த ஜான் என்பவர் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர். நடிகர் ஸ்ரீ காந்த் ஒரு கிராம் ரூ.12,000 என்ற விலையில் மொத்தம் ரூ.4 லட்சம் வரை பணப்பரிமாற்றம் நடைபெற்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஸ்ரீ காந்த் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு 7-ம் தேதி வரை நீதிமன்றம் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.


ஸ்ரீ காந்தின் நட்பு வட்டாரங்களில் உள்ள பிரபலங்கள் யாரேனும் இந்த போதை பொருளை பயன்படுத்தினார்களா? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை செய்ய உள்ளனர். திரைத்துறையில் பல பிரபலங்களும் போதை பொருள் பயன்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது என்பதால் மேலும் பல பிரபலங்கள் இதில் சிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலை நடிகர் ஸ்ரீ காந்தை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் இருந்து ஸ்ரீ காந்த் 250 கிராம் கொக்கைன் வாங்கியதாக தகவல் வெளியாக உள்ளது. சமீபத்தில் துபாயிலிருந்து திரும்பிய ஸ்ரீகாந்த், சனிக்கிழமை தனது வீட்டில் பார்ட்டி நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

போதை பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஸ்ரீ காந்துடன் வேறு நடிகர்களுக்கு தொடர்பா என்று விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் ஸ்ரீ காந்த் யார் மூலம் போதைப் பொருள் வாங்கி உள்ளார் என்பது குறித்தும் விசாரிகப்பட உள்ளது.

நடிகர் ஸ்ரீகாந்த் ஒன்றரை வருடங்களாக கொகைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீ காந்திற்கு முதல் வகுப்பு சிறை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல் வகுப்பு சிறை வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்த நிலையில் நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. அதன்பேரில் அவர் முதல் வகுப்பு சிறையில் இருக்கிறார்.. ஜாமீன் கோரி ஸ்ரீ காந்த் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணாவுக்கு நுங்கம்பாக்கம் காவல்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த வழக்கில் கிருஷ்ணாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். போதை பொருள் எங்கிருந்து வருகிறது, இவர்கள் கைக்கு எப்படி இவர்களுக்கு கிடைக்கிறது ? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. அதே போல் நடிகர் கிருஷ்ணாவுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Read More : அஜித்துக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி ஆயிட்டாரு? வைரலாகும் புதிய லுக்.. ஷாக்கான ரசிகர்கள்..

RUPA

Next Post

ஒரு காலத்தில் நண்பராக இருந்த அமெரிக்கா, ஈரானின் பரம எதிரியாக மாறியது எப்படி..?

Tue Jun 24 , 2025
ஜூன் 22 அன்று, ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போரின் போது, ​​அமெரிக்கா ஈரானின் மூன்று அணுசக்தி தளங்களான நிடாஞ்ச், இஸ்ஃபஹான் மற்றும் ஃபோர்டோவை B-2 குண்டுவீச்சு விமானங்களால் தாக்கியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, கத்தாரின் தலைநகரான தோஹாவில் உள்ள அமெரிக்க தளத்தை ஈரான் ஏவுகணைகளால் குறிவைத்தது. இருப்பினும், ஈரானிய ஏவுகணைகளால் அமெரிக்க தளம் அதிக சேதத்தை சந்திக்கவில்லை. ஆனால் மீண்டும் ஒருமுறை இரு நாடுகளுக்கும் இடையிலான விரோதம் […]
america iran

You May Like