மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் போதைப் பொருட்கள்…! 60,000 பேர் கொண்ட குழு அமைத்த மத்திய அரசு….!

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, “போதை பழக்கமற்ற அமிர்த காலம்” என்ற தேசிய பிரச்சாரத்தை குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் தொடங்கியது. ஆரோக்கியமான மற்றும் போதைப் பழக்கம் இல்லாத இந்தியாவை ஊக்குவிக்கும் இந்தப் பிரச்சாரம், புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் இல்லாத நாட்டை உருவாக்கும் இயக்கத்தின் குறிப்பிடத்தக்க முன்முயற்சியாகும். புகையிலை இல்லா இந்தியா என்ற மக்கள் குழுவின் தொழில்நுட்ப ஆதரவுடன் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறது.


நாட்டில் குழந்தைகளிடையே அதிகரித்துள்ள புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் இந்தப் பிரச்சாரம் தீவிரமாக உள்ளது.ஓ.டி.டி தளங்களில் புகையிலை காட்சிகளின் போது கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து அண்மையில் மத்திய அரசு வெளியிட்டிருந்தது.

புகையிலை பயன்பாட்டினால் குழந்தைகள் மறைமுகமாக அதிகளவில் பாதிக்கப்படுவதால் பள்ளிகளில் பிரகாரி குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுவரை சுமார் 60,000 குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

அடித்தது ஜாக்பாட்..!! இப்படியே போன விவசாயிகளும் கோடீஸ்வரர்கள் தான்..!! இதுதான் வேலையாம்..!!

Thu Jun 8 , 2023
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் 30 கேரட் வைரத்தை தனது விளைநிலத்தில் இருந்து எடுத்து 2 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டதாக கூறப்படும் தகவல் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி, துக்கிலி, மடிகேரா, பெகதிராய், பேராபலி, மஹாநந்தி மற்றும் மஹாதேவபுரம் கிராமங்களில் உள்ள வயல் பகுதிகளில் மழைக்கு பின்னர் வைரக்கற்கள் தானாகவே வெளியே வரும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 2019ஆம் ஆண்டில் […]
102817835 d5

You May Like