அடுத்தடுத்து நிலநடுக்கம்..!! நள்ளிரவில் குலுங்கிய வீடு..!! அலறியடித்து ஓடிய மக்கள்..!! எங்கு தெரியுமா..?

அந்தமானில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.


ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கில் உள்ள பைசபாத் பகுதியில் இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.

முன்னதாக நேற்று அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்தமானில் உள்ள கேம்ப்பெல் விரிகுடாவில் ஏற்பட்டது. கேம்ப்பெல் விரிகுடாவில் இருந்து 162 கிமீ தொலைவில் தென்கிழக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3ஆகப் பதிவானது. நிலநடுக்கம் காரணமாக அங்கே இருக்கும் பல முக்கிய கட்டிடங்கள் குலுங்கியன.

இதனால் பொதுமக்கள் உடனடியாக கட்டிடங்களை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். அந்தமானில் நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது மக்களுக்கு சற்று அச்சத்தை கொடுப்பதாக கூறுகின்றனர்.

CHELLA

Next Post

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர் கொலை..!! அமெரிக்கா அதிரடி அறிவிப்பு..!!

Mon Jul 10 , 2023
சிரியாவில் அமெரிக்கா MQ 9 ட்ரோன்கள் மூலமாக நடத்திய வான் தாக்குதலில் ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தலைவர் உஸ்மா அல் முஹாஜிர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கிழக்கு சிரியாவில் தங்கியிருந்த தீவிரவாத தலைவரை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த ட்ரோன்களை சில நாட்களுக்கு முன்பு ஈராக்-சிரியா எல்லைப் பகுதி அருகே ரஷ்ய போர் விமானங்கள் இடை மறித்து நேருக்கு நேர் மோத வந்ததாக கூறப்பட்டது. இது […]
helicopter a 7

You May Like