டாஸ்மாக் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களுக்கு எதிரான வழக்கை விசாரித்து வந்த ED அதிகாரிகள் பணியிடமாற்றம்..!!

ED tasmac 1

தமிழக அரசியலில் புயலை கிளப்பிய டாஸ்மாக் வழக்கை விசாரித்து வரும் ED அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சென்னை மண்டல அமலாக்கத்துறை இணை இயக்குநர் பியூஸ் குமார் யாதவ் மற்றும் துணை இயக்குநர் கார்த்திக் தசாரி ஆகிய இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தையே பரபரப்பு உள்ளாக்கிய வழக்குகளான கனிமவளக் கொள்ளை வழக்கு, டாஸ்மாக் வழக்கு, அமைச்சர் துரைமுருகன் வழக்கு, எம்.பி கதிர் ஆனந்த் வழக்கு, முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கு, ஜி ஸ்கொயர் வழக்கு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் அதிரெடி சோதனை செய்து விசாரணை அதிகாரிகளாக தமிழகத்தையே பரபரப்பாகிய அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை கீரீன்வேஸ் சாலையில் அவரது வீட்டில் வைத்து கைது செய்தது இணை இயக்குநர் பியூஸ் குமார் யாதாவ் ஆவார். IRS அதிகாரிகளான பியூஸ் குமார் யாதவ் மற்றும் கார்த்திக் தசாரி ஆகியோர் அயலக பணியில்(Deputation) அமலாக்கத்துறை அலுவலகத்தில் இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநராக பணிபுரிந்து வந்த நிலையில் தற்போது வருமான வரித்துறைக்கே மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Read more: எப்புட்ரா.. 280 கி.மீ வேகத்தில் சென்ற புல்லட் ரயிலில் அசையாமால் நின்ற நாணயம்..!! வியந்து போன நெட்டிசன்கள்..

Next Post

BREAKING | குட் நியூஸ்..!! தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துக் கட்டணம் உயராது..!! அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு..!!

Tue Jun 3 , 2025
தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளுக்கான கட்டணம் உயர்த்தப்படாது என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி 20,508 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், சுமார் 1.85 கோடி பேர் பயணம் செய்கின்றனர். மேலும், இந்த பேருந்துகளுக்கு தினமும் 17 லட்சம் லிட்டர் டீசல் போடப்படுகிறது. ஆனால் டீசல் விலை, சுங்கச்சாவடி கட்டணம் உயர்வால் செலவு அதிகரித்துள்ளது. தினசரி வருவாய் ரூ.39 கோடியாக உள்ள நிலையில், செலவு […]
TN Bus 2025

You May Like