தமிழக அரசியலில் புயலை கிளப்பிய டாஸ்மாக் வழக்கை விசாரித்து வரும் ED அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மண்டல அமலாக்கத்துறை இணை இயக்குநர் பியூஸ் குமார் யாதவ் மற்றும் துணை இயக்குநர் கார்த்திக் தசாரி ஆகிய இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தையே பரபரப்பு உள்ளாக்கிய வழக்குகளான கனிமவளக் கொள்ளை வழக்கு, டாஸ்மாக் வழக்கு, அமைச்சர் துரைமுருகன் வழக்கு, எம்.பி கதிர் ஆனந்த் வழக்கு, முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கு, ஜி ஸ்கொயர் வழக்கு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் அதிரெடி சோதனை செய்து விசாரணை அதிகாரிகளாக தமிழகத்தையே பரபரப்பாகிய அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை கீரீன்வேஸ் சாலையில் அவரது வீட்டில் வைத்து கைது செய்தது இணை இயக்குநர் பியூஸ் குமார் யாதாவ் ஆவார். IRS அதிகாரிகளான பியூஸ் குமார் யாதவ் மற்றும் கார்த்திக் தசாரி ஆகியோர் அயலக பணியில்(Deputation) அமலாக்கத்துறை அலுவலகத்தில் இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநராக பணிபுரிந்து வந்த நிலையில் தற்போது வருமான வரித்துறைக்கே மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.