தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கூட்டணி கணக்குகள் மற்றும் ஆதரவு நிலப்பாடுகள் குறித்த அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, மேற்கு மண்டலமான கொங்கு பகுதியில் அதிமுக தனது பிடியை மேலும் வலுப்படுத்தும் விதமாக, பல்வேறு சிறிய கட்சிகளின் ஆதரவை திரட்டி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சேலத்தில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, கொங்குநாடு விவசாயிகள் கட்சியின் பொதுச்செயலாளர் ராஜாமணி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு முடிந்த கையோடு, வரும் தேர்தலில் அதிமுகவுக்கு தங்களது கட்சி நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ராஜாமணி, விவசாயிகளின் நலனில் எடப்பாடி பழனிசாமி காட்டிய அக்கறையை பாராட்டினார். “கடந்த கால அதிமுக ஆட்சியில்தான் விவசாயிகளுக்கான ஆக்கப்பூர்வமான திட்டங்கள் கடைக்கோடி விவசாயிக்கும் சென்றடைந்தன. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதிலும் எடப்பாடி பழனிசாமி அரசு ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தது. எனவே, தமிழக விவசாயிகளின் நலன் கருதி இந்த ஆதரவு முடிவை எடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
Read More : தமிழ்நாட்டில் நாளை முதல் லாரிகள் ஓடாது..!! அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்..!!


