முதுகில் குத்திய எடப்பாடி..!! முதல்வர் நாற்காலியில் அமர வேண்டியது நான் தான்..!! பரபரப்பை கிளப்பிய சசிகலா..!!

EPS Sasikala 2026

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம், தமிழக அரசியலில் மீண்டும் ஒரு புயலை கிளப்பியுள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு பொதுமேடையில் அதிரடி காட்டிய சசிகலா, அதிமுகவின் தற்போதைய தலைமை மற்றும் உட்கட்சிப் பூசல்கள் குறித்து பரபரப்பு கருத்துகளை வெளியிட்டுள்ளார்.


தனது உரையில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிகாரத்தின் மீதான ஆசையில் தான் பொதுச்செயலாளர் பதவியை ஏற்கவில்லை என்றும், தொண்டர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே அந்தப் பொறுப்பைச் சுமந்ததாகவும் விளக்கமளித்தார். ஓபிஎஸ் அவர்களுக்கு ஏற்பட்ட நிர்வாக சிக்கல்கள் மற்றும் அரசியல் நெருக்கடிகள் காரணமாகவே, அன்று தான் முதல்வர் நாற்காலியில் அமர வேண்டிய சூழல் உருவானதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்துப் பேசுகையில், எந்தக் கையை பிடித்து ஒருவரை முதல்வர் நாற்காலியில் அமர வைத்தேனோ, அவரே பின்னால் இருந்து முதுகில் குத்தி என்னைக் கட்சியை விட்டு நீக்கினார். தான் சிறையில் இருந்தபோது சந்தித்த நெருக்கடிகள், கணவர் நடராஜனின் உடல்நலக் குறைவின் போது பரோல் பெறுவதில் ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் என அனைத்திற்கும் ஈபிஎஸ் தரப்பே காரணம் என சாடினார். நல்லவர்கள் பெயரை நாவால் உச்சரிக்கலாம், ஆனால் இந்தப் பெயரைச் சொல்லக் கூட எனக்கு விருப்பமில்லை என வெறுப்பை வெளிப்படுத்தினார்.

தற்போது அதிமுக, பாஜக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் பயணிக்கும் வேளையில், ஓபிஎஸ் மற்றும் சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக மறுத்து வருகிறார். இந்த இக்கட்டான சூழலில், தென் தமிழகத்தில் சசிகலா காட்டியுள்ள இந்த அதிரடி வேகம், வரும் தேர்தல்களில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ தலைமைக்கு சவாலாக அமையும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Read More : முருகப்பெருமானின் 8ஆம் படை வீடு எங்கிருக்கு தெரியுமா..? இந்த கோயிலுக்கு போனாலே உங்கள் தலைவிதி மாறும்..!!

CHELLA

Next Post

மார்ச் மாதத்தில் தொடங்கும் கோடை..!! இந்தாண்டு வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும்..!! 2027இல் உச்சம் தொடும்..!! வெளியான எச்சரிக்கை..!!

Wed Feb 25 , 2026
தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நிலவிய கடும் பனிப்பொழிவு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தது. இந்தப் பனியின் தாக்கம் குறைவதற்குள்ளாகவே, தற்போது மார்ச் முதல் வாரத்தில் இருந்தே கோடை வெயில் தனது விஸ்வரூபத்தை எடுக்க தயாராகிவிட்டது. குறிப்பாக, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும் என்றும், வழக்கத்திற்கு மாறாக அக்டோபர் மாதம் வரை வெப்பம் […]
Summer 2026

You May Like