ஊழியர்களின் பணிநீக்க நடவடிக்கையையடுத்து, ட்விட்டர் நிறுவனர் எலான் மாஸ்க் எங்கு சென்றாலும் பாதுகாவலர்களுடன் செல்வதாக அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்தாண்டு ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கினார். இதையடுத்து, ஊழியர்களின் பணிநீக்க நடவடிக்கை கையில் எடுத்த அவர், ஏராளமான ஊழியர்களை பணியில் இருந்து நீக்கினார்.இதையடுத்து இவரது பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் மெய்க்காப்பாளர், தனியார் பாதுகாவலர்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய எஸ்கார்ட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவரின் பாதுகாவலர் எலான் மஸ்க் எங்கு சென்றாலும், அவருடன் செல்கின்றனர். “எங்கு சென்றாலும்” என்பதில் கழிவறையும் அடங்கும். இதுகுறித்து டுவிட்டரில் பணியாற்றி வரும் பொறியாளர் ஒருவர் கூறும் போது, எலான் மஸ்க்-ஐ சுற்றி எப்போதும் பாதுகாவலர்கள் உள்ளனர். டுவிட்டர் அலுவலகத்தில் அவரை சுற்றி எப்போதும் குறைந்தபட்சம் இரண்டு காவலர்கள் உள்ளனர். “அலுவலகத்தில் அவர் எங்கு சென்றாலும், அவருடன் இரண்டு பாதுகாவலர்கள் உடன் செல்கின்றனர்.
பாதுகாவலர்கள் பிரமாண்டமாகவும், ஹாலிவுட் படங்களில் வருவதை போன்று காட்சியளிக்கின்றனர். அவர் கழிவறைக்கு சென்றாலும் இவர்கள் பின்தொடர்கின்றனர்” என தெரிவித்துள்ளார். சான் பிரான்டிஸ்கோவில் உள்ள டுவிட்டர் தலைமையகத்தில் மஸ்க்-ஐ சுற்றி பாதுகாவலர்கள் இருப்பதை பார்க்கும் போது, அவருக்கு நிறுவன ஊழியர்கள் மீது நம்பிக்கை இல்லை என்றே தெரிகிறது.