தமிழ்நாடு சிறைத்துறையில் வேலைவாய்ப்பு..!! சம்பளம் ரூ.1,30,400 வரை..!! டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாடு சிறைத்துறையில் காலியாக உள்ள உதவி சிறை அலுவலர் (ஆண்கள் மற்றும் பெண்கள்) பதவிகளுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.


மற்றத் துறை தேர்வுகள் போல் அல்லாமல், இந்த தேர்வுக்கு ஏதேனும் டிகிரி பட்டம் படித்திருந்தால் போதுமானது. மேலும், இந்த தேர்வுக்கான பாடப் பிரிவுகள் பெரும்பாலும் குரூப் 1, குரூப் 2 தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அறிந்த ஒன்றாக இருப்பதால், மேற்படி தேர்வர்கள் இதற்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள்: உதவி சிறை அலுவலர் – ஆண்கள் (54), பெண்கள் (5)

கல்வித் தகுதி: பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொது பிரிவு விண்ணப்பதாரர், 01.07.2023 அன்று 18 -32 வயதுக்குள் இருக்க வேண்டும். ஏனைய பிரிவினருக்கும், அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு இல்லை.

சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், பணியிட ஒதுக்கீடு விதி ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

தேர்வுக்கான பாடத்திட்டம்: எழுத்துத் தேர்வு 2 தாள்களைக் கொண்டது. தாள் I-ல் அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகள், இந்தியா மற்றும் தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பதுடன் கூடிய மாநில நிர்வாகம், சமூக பொருளாதார பிரச்சனைகள், தேசிய அளவிலான நடப்பு நிகழ்வுகள், மாநில அளவிலான நடப்பு நிகழ்வுகள் ஆகிய தலைப்புகளில் இருந்து 200 கேள்விகள் கேட்கப்படும்.

2ஆம் தாளில், தமிழ்மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு, பொது அறிவு, திறனறிவுத் தேர்வு ஆகியவற்றில் இருந்து 200 கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி..? விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

CHELLA

Next Post

முதலிரவில் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! மனைவி கர்ப்பமாக இருந்ததால் பரபரப்பு..!! நடந்தது என்ன..?

Tue Apr 18 , 2023
ஒருவர் தனது வாழ்வில் முக்கிய நிகழ்வாக பார்ப்பது திருமணம்தான். திருமணம் முடிந்த கையோடு குடும்பத்தார் மிகுந்த உற்சாகத்துடன் புதுமணத் தம்பதிக்கு முதலிரவு ஏற்பாடு செய்து தருவது நம் நாட்டில் வழக்கமாக உள்ளது. அத்தகைய மகிழ்ச்சியான தருணம் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ஒரு புது மாப்பிள்ளைக்கு துயரமாக மாறியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் ஷிவ்புரியைச் சேர்ந்த ஒரு நபருக்கு அண்மையில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின்னர் முதலிரவு அன்று தம்பதி தனிமையில் இருந்த […]
முதலிரவில் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! மனைவி கர்ப்பமாக இருந்ததால் பரபரப்பு..!! நடந்தது என்ன..?

You May Like