#பாண்டியன்_ஸ்டோர்ஸ் பாணியில்.. இங்கிலாந்து ஓட்டலில் அரங்கேறிய கொடுமை.!

தனக்கு சம்பளம் வராத ஓட்டலை பழிவாங்க ஒரு இங்கிலாந்து நபர் கரப்பான் பூச்சியை கிச்சனில் விட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.


இங்கிலாந்து நாட்டில் உள்ள லிண்டன் நகரம் பகுதியில் ராயல் வில்லியம் என்ற ஓட்டல் இயங்கி வருகின்றது இதில் டோனி வில்லியம்ஸ் என்ற நபர் சமையல் நிபுணராக பணியாற்றி வந்துள்ளார். அந்த விடுதியின் உரிமையாளர் டோனிக்கு சரிவர சம்பளத்தை கொடுக்கவில்லை

இதன் காரணமாக இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து டோனி வில்லியம்ஸ் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்து விட்டார். சம்பளம் தராத அந்த முதலாளியை டோனி வில்லியம் பழிவாங்க நினைத்துள்ளார். எனவே 10 கரப்பான் பூச்சிகளை அந்த ஓட்டலின் சமையலறைக்குள் அவர் விட்டுவிட்டார்.

இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. எனவே, அந்த ஹோட்டல் மூடப்பட்டுள்ளது. இது குறித்து டோனி வில்லியம்ஸ் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு கோர்ட் 17 மாதம் சிறை தண்டனை வழங்கியுள்ளது. தற்போது மூடப்பட்டுள்ள அந்த ஓட்டலில் கரப்பான் பூச்சிகளை சுத்தப்படுத்துகின்ற பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

1newsnationuser5

Next Post

இனி ஓட்டலுக்கு சாப்பிட போனா உஷாரா தான் இருக்கனும் போல.? 10 ஆயிரம் பில் கட்டிய கொடூரம்.!

Thu Jan 26 , 2023
இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் நியூ மார்க்கெட் ரோட்டில் மெக்டனால்டு துரித உணவகம் ஒன்று இருந்துள்ளது. அதில் ஷாபூர் மெப்தா என்ற அந்த நபர் தனது காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்று சகோதரனை சந்தித்து நிறைய உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு அங்கிருந்து பில் கொடுக்க சென்றுள்ளார். அப்போது அவருக்கு காரை 90 நிமிடங்களுக்கு மேல் நிறுத்திய காரணத்தால் அபராதம் விதிக்கப்பட்டது. அதாவது அந்த அபராத தொகை 10,000 ரூபாய். […]
மெக்டொனால்டு கடைக்கு சீல்வைப்பு..! குளிர்பானத்தில் பல்லி மிதந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி..!

You May Like