தொகுப்பாளர் கோபிநாத் சிறைக்குள் இருக்கும் வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் சமூகத்திற்கு தேவையான பல விஷயங்களை காரசாரமாக விவாதித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தொகுப்பாளர் கோபிநாத். இவர் நிகழ்ச்சி தொகுப்பாளர் மட்டுமன்றி வானொலிகளிலும் RJ வாக பணியாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து பிரபல தொலைக்காட்சிகளில் “மக்கள் யார் பக்கம்” மற்றும் “சிகரம் தொட்ட மனிதர்கள், நடந்தது என்ன?” என்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இருந்தாலும், இவருக்கென ஒரு பெயரை பெற்றுக்கொடுத்தது “நீயா நானா” நிகழ்ச்சி தான்.
இந்நிலையில், தொகுப்பாளர் கோபிநாத், தனியாக ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதில், மக்களுக்கு தேவையான பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், கோபிநாத் வெளிநாடு ஒன்றிற்கு சுற்றுலாச் சென்றுள்ளார். அங்கு கைதிகளை அடைத்து வைத்திருக்கும் சிறைச்சாலைகள் கொண்ட தனித்தீவு ஒன்று இருந்துள்ளது. அந்த தீவு “அல்கட்ராஸ்” என அழைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் தற்போது வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு பார்வையிடுவதற்கு ஏற்ற இடமாக மாற்றப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு சென்று சிறைச்சாலையில் உள்ள சில இடங்கள் பற்றி மக்களுக்கு ரிவீவ் கொடுத்துள்ளார் கோபிநாத்.
அப்போது சிறைக்குள் சென்று, இதில் இவ்வாறு தான் கைதிகள் இருந்திருப்பார்கள் என ஒரு கற்பனையாக கூறியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் சிறைக்குள் சென்றிருக்கும் கோபிநாத்தை பார்த்து பதறியுள்ளார்கள். மேலும், இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.