தென்னிந்திய திரைப்பட நடிகை அஞ்சு அரவிந்த். இவர் மலையாளம், தமிழ், கன்னட உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினிகாந்த், மோகன்லால், மம்முட்டி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலம் ஆனார். கடந்த 1996ஆம் ஆண்டு தமிழில் வெளியான பூவே உனக்காக படம், இவருக்கு பெரிய ரீச் கொடுத்தது. பின்னர், தொடர்ந்து நடிப்பார் என்று பார்த்த நிலையில், அவர் சினிமாவில் பக்கமே வரவில்லை.
இதையடுத்து, சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி இருந்தவர் சமீபத்தில் தனது வாழ்க்கை மற்றும் சினிமா பயணம் குறித்து பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து அஞ்சு அரவிந்த் கூறுகையில், “என்னுடைய முதல் திருமணம் விவாகரத்தில் தான் முடிந்தது. பின்னர், எல்லாம் சரியாகிவிடும் என நினைத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன்.
ஆனால், அந்த திருமணமும் சோகத்தில் முடிந்தது. திருமணம் முடிந்த சில நாட்களுக்கு பின், என்னுடைய 2-வது கணவர் இறந்துவிட்டார். இதனால் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தேன். பிறகு வாழ்க்கை சில ஆச்சரியங்களை எனக்கு கொடுத்தது. இப்போது லிவ்-இன் உறவில் இருக்கிறேன். எனக்கு துணையாக சஞ்சய் அம்பல பரம்பத் என்பவர் இருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளாக நங்கள் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வருகிறோம்.
பெங்களூருவில் நடன டீச்சர் என்ற அடையாளத்தை எனக்கு கொடுத்ததே சஞ்சய்தான். நான் 8ஆம் வகுப்பு படிக்கும்போது சஞ்சய்தான், எனக்கு முதல் காதலன். பின்னர், நாங்கள் இருவரும் சேர்ந்து 96 படத்தை பார்த்தோம். அந்த படம் எங்களை முழுமையாக ஈர்த்துவிட்டது. பள்ளி காலத்தில் செல்போன்கள் எல்லாம் பெரிதாக கிடையாது. அதனால் நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டோம். இப்போது மீண்டும் ஒன்றுசேர்ந்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.