4 பெண்களை திருமணம் செய்தும் ஆசை அடங்கல..!! 5-வதாக இளம்பெண்ணுடன் மலர்ந்த கள்ளக்காதல்..!! மாற்றுத்திறனாளியின் ஷாக்கிங் பின்னணி..!!

Nellai 2025

நெல்லை மாவட்டம் அழகியபாண்டிபுரம் அருகே உக்கிரமன்னன் கோட்டை பகுதியைச் சேர்ந்த 54 வயது மிலன்சிங் என்ற மாற்றுத்திறனாளி ஏற்கனவே 3 திருமணங்கள் செய்த நிலையில், அவர்களை பிரிந்து ஜீவிதா என்பவரை 4-வதாக திருமணம் செய்து கொண்டார்.


இந்நிலையில், மலையன்குளத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுடன் மிலன்சிங்கிற்கு நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்தப் பெண் திடீரென மாயமானார். இந்நிலையில், அவரது பெற்றோர் குருவிகுளம் காவல் நிலையத்தில் தனது மகள் காணாமல் போனதாக புகார் அளித்தனர்.

இதற்கிடையே, தருமபுரி – கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையின் ஓரத்தில் 2016-ஆம் ஆண்டு ஒரு பெண் சடலம் காணப்பட்டது. சடலம் அரைகுறையாக எரிந்த நிலையில், காவேரிப்பட்டிணம் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். முதலில் அடையாளம் தெரியாத நிலையில் இருந்த அந்தச் சடலம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, மிலன்சிங்குக்கு இந்த வழக்கில் தொடர்புடையது தெரியவந்தது. அந்தப் பெண்ணை ஆசை வார்த்தைகளால் ஏமாற்றி, தருமபுரி அருகே உள்ள வெண்ணம்பட்டி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வைத்திருந்ததும், அந்த இடத்தில் அவரை அடைத்து வைத்து பலாத்காரம் செய்து வந்ததும் தெரியவந்தது.

பின்னர், அந்தப் பெண்ணை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். இதையடுத்து, அவரது சடலத்தை நெடுஞ்சாலை ஓரத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்தது விசாரணையில் அம்பலமானது. இந்த கொலை வழக்கில் மிலன்சிங்கின் 4-வது மனைவி ஜீவிதாவுக்கும் தொடர்பு இருந்த நிலையில், அவரையும் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு முதலில் இருவேறு பகுதிகளில் நடைபெற்றாலும், இரண்டையும் இணைத்து, சிறப்பு விசாரணை அமைப்பான CBI-க்கு மாற்றப்பட்டது.

வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் ஆதாரங்களை பரிசீலித்த நீதிபதி சுதா, குற்றவாளி மிலன்சிங்கும், ஜீவிதாவுக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Read More : உங்களுக்கு கொரியன் ஸ்கின் வேண்டுமா..? இந்த ஒரு பொருள் செய்யும் மயாஜாலம்..!! தினமும் இப்படி பயன்படுத்துங்க..!!

CHELLA

Next Post

இதில் முதலீடு செய்தால் ரூ.40 லட்சம் சேமிக்கலாம்.. அசத்தல் சேமிப்பு திட்டம்!

Tue Sep 2 , 2025
ஏழை, எளிய மக்களுக்கு இந்திய அரசு, தபால் நிலையங்கள் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தபால் நிலையங்கள் சிறிய தொகையில் முதலீடு செய்யக்கூடிய பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்குகிறது. இவை அரசு உத்தரவாதம் பெற்றவை என்பதால், மக்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதுகின்றனர். அந்த வகையில், தபால் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் 7.1% வட்டி வழங்குகிறது. ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்து, […]
Post Office Investment

You May Like