பிரம்மபுத்திரா நதி நீரை சீனா நிறுத்தினாலும், இந்தியா பாதிக்கப்படாது!. பாகிஸ்தானுக்கு அசாம் முதல்வர் பதிலடி!.

assam cm himanta biswa

பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. இதில் குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்ததம் ரத்து அமைந்து இருந்தது. பாகிஸ்தானின் 80 சதவீத விவசாயம் சிந்து நதி நீரை நம்பியிருப்பதால், இந்தியா அந்த நீரை நிறுத்த எடுத்து இருக்கும் முடிவு பாகிஸ்தானுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதற்கிடையே பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் சீனா இப்போது சில கருத்துகளைத் தெரிவித்துள்ளது. பீஜிங்கில் உள்ள சீனா மற்றும் உலகமயமாக்கல் மையத்தின் துணைத் தலைவர் விக்டர் ஜிகாய் காவ், இந்தியாவுக்குப் பிரம்மப்புத்திரா நதியிலிருந்து தண்ணீர் வருவதைச் சீனா நிறுத்தக்கூடும் என்று கூறியிருக்கிறார். பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்திருந்த நிலையில், அதற்கு அதிருப்தி தெரிவித்த பிறகே விக்டர் இந்த கருத்துகளைக் கூறினார்.

இந்தியாவின் நீர் பாதுகாப்புக்கு மிக முக்கியமான நதியாக பிரம்மப்புத்திரா உள்ளது. திபெத்தில் உள்ள திபெத்தில் உள்ள ஆங்சி பனிப்பாறையில் உருவாகக்கூடிய பிரம்மப்புத்திரா நதி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வழியாக வங்கதேசத்திற்கு செல்கிறது. புவியியல் அதிசயமாக அமைந்து இருக்கும் இந்த நதியை இந்தியா – சீனா இடையே புவிசார் அரசியலுக்கான கருவியாக மாற்ற சீனா முயற்ச்சித்து வருகிறது.

பாகிஸ்தானின் இந்த அச்சுறுத்தலுக்கு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பதிலளித்துள்ளார். சமூக ஊடக தளமான X இல் அவர் பதிவிட்டதாவது,பிரம்மபுத்ரா நதி சீனாவைச் சார்ந்தது அல்ல, மாறாக இந்தியாவின் பருவமழை மற்றும் துணை நதிகளைச் சார்ந்தது என்று தெளிவுபடுத்தினார். சர்மாவின் கூற்றுப்படி, பிரம்மபுத்ராவின் மொத்த நீர் ஓட்டத்தில் சீனா 30 முதல் 35 சதவீதம் மட்டுமே பங்களிக்கிறது, இது முக்கியமாக உருகும் பனிப்பாறைகள் மற்றும் குறைந்த மழைப்பொழிவிலிருந்து வருகிறது.

சர்மா கூறுகையில், பிரம்மபுத்திரா இந்தியாவிற்குள் நுழைந்த பிறகு அதிக சக்தி வாய்ந்த நதியாக மாறும். அருணாச்சல பிரதேசம், அசாம், நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் பருவமழை பெய்யும், இது நதிக்கு தண்ணீரை வழங்குகிறது. இது தவிர, சுபன்சிரி, லோஹித், கமெங், மனாஸ், தன்சிரி, ஜியா-பராலி, கோபிலி, கிருஷ்ணாய், திகாரு மற்றும் குல்சி போன்ற துணை நதிகள் பிரம்மபுத்திராவிற்கு தண்ணீரை வழங்குகின்றன. டூட்டிங்கில் உள்ள சீன எல்லையிலிருந்து அதன் ஓட்டம் வினாடிக்கு 2,000 முதல் 3,000 கன மீட்டர் வரை இருந்தாலும், குவஹாத்தி போன்ற பகுதிகளில் பருவமழையின் போது வினாடிக்கு 15,000 முதல் 20,000 கன மீட்டர் வரை அடையும்.

பிரம்மபுத்திரா நதி, எந்த ஒரு நாட்டையும் சார்ந்து இல்லாத, இந்திய மழை நீர் நதி அமைப்பு என்று சர்மா தெளிவாகக் கூறினார். சீனா தண்ணீரை மட்டுப்படுத்தினாலும், இந்தியாவுக்கு அதனால் பெரிய இழப்பு ஏற்படாது, மாறாக, ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து செல்லும் அசாமின் பயங்கர வெள்ளத்தைக் குறைக்க முடியும். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை 74 ஆண்டுகளாக நியாயமற்ற முறையில் பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தான், இப்போது இந்தியாவின் இறையாண்மையைக் கண்டு அஞ்சுகிறது.

பிரம்மபுத்திரா நதி எந்த ஒரு மூலத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக இந்தியாவின் புவியியல், பருவமழை மற்றும் கலாச்சார சக்தியால் வளர்க்கப்படுகிறது என்பதை சர்மா பாகிஸ்தானுக்கு நினைவூட்டினார். அத்தகைய சூழ்நிலையில், பயத்தை பரப்ப பாகிஸ்தானின் முயற்சி பயனற்றது என்று கூறியுள்ளார்.

Readmore: இன்று உலக சைக்கிள் தினம்!. தினமும் 30 நிமிடம் சைக்கிள் ஓட்டுவது உடலுக்கு எத்தனை நன்மைகள் தெரியுமா?

KOKILA

Next Post

அரசு பள்ளி மாணவர்கள் இனி ஆங்கிலத்தில் சுலபமா பேசி அசத்தலாம்.. புதிய திட்டம் அமல்..!!

Tue Jun 3 , 2025
அரசுப்பள்ளி மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்த லெவல் அப் என்ற புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறன், கல்வி திறன் ஆகியவற்றை மேம்படுத்தி, அகில இந்திய அளவில் அனைத்து வாய்ப்புகளும் மாணவர்களுக்கு கிடைக்கும் நிலையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக புதுப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம், திறன்கள் திட்டம் உள்ளிட்டவை மாணவர்களிடையே […]
school 1

You May Like