இந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தங்க நகைக்கடன் தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ரிசர்வ் வங்கி தற்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வங்கிகள் அல்லாத நிறுவனங்களில் வழங்கப்படும் கடன்கள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் அரசுத் துறைகளில் ரூ.2.5 லட்சம் மதிப்பு வரையிலான நகைகளுக்கு இனி 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கடன் பெறும் தொகை சற்று கூடுதலாக கிடைக்கும். அதாவது, இதுவரை ரூ.1 லட்சம் ரூபாய்க்கு வைக்கப்படும் தங்க நகைக்கு ரூ.75,000 மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி ரூ.85,000 வழங்கப்படும். மேலும், கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக்கடன் பெற அதற்கான ரசீது சமர்பிக்க வேண்டும் என்கிற நிபந்தனையும் தளர்த்தப்பட்டுள்ளது.
எனவே, இனி கடன் பெற கடன்தாரரின் சுய அறிவிப்பு மட்டும் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் என்பது முத்தூட் ஃபைனான்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களை குறிப்பதாகும். ரிசர்வ் வங்கியின் இந்த புதிய அறிவிப்பால் மக்கள் சற்று நிம்மதியில் உள்ளனர்.
Read More : இனி கவலையே வேண்டாம்..!! அவசரத்திற்கு உதவும் ஆதார்..!! ரூ.10,000 வேண்டுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!