வட்டாரக் கல்வி அலுலவர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வட்டாரகக்கல்வி அலுவலர் பணியிடத்திற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.gov.in என்ற இணையகளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் ஜூன் 6-ம் தேதி முதல் ஜூலை 5-ம்தேதி மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டார கல்வி அலுவலர் பணியில் 33 இடங்கள் நிரப்பப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம், விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடுவை நீடித்து அறிவித்துள்ளது. அதன்படி வட்டாரக் கல்வி அலுலவர் பணிக்கு விண்ணப்பிக்க தேர்வர்கள் அவகாசம் கேட்டுள்ளதால், ஜூலை 12-ம் தேதி மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.