20 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 20 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால், பயந்துபோன பெற்றோர் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பெற்றோரிடம் தெரிவித்தார். இதனைக் கேட்டு, அதிர்ந்துபோன பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் அந்த குழந்தையின் பக்கத்து வீட்டில் வசித்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில் குழந்தை தனியாக இருந்ததாகவும், இதனால் குழந்தையை பலாத்காரம் செய்ததாகவும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.