விசாரணைக்காக 2 சிறுமிகளை ஆளில்லா காட்டுக்குள் அழைத்துச் சென்ற போலி போலீஸ்..!! வாயை பொத்தி கூட்டு பலாத்காரம்..!!

Rape 2025 1

ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த 16 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஜார்க்கண்ட் மாநிலம் டால்டன்கஞ்ச் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் 16 வயது சிறுமி மற்றும் அவரது தங்கை ரயிலுக்காக காத்திருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இருவர், தங்களை போலீஸ் என அவர்களிடம் கூறியுள்ளனர். மேலும், சிறுமியிடம் பெயர் மற்றும் மற்ற விவரங்களை விசாரித்துள்ளனர்.

பின்னர், இருவரும் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு வர வேண்டும். விசாரணை முடிந்ததும் மீண்டும் இதே இடத்தில் கொண்டு வந்து விட்டு விடுவதாக கூறியுள்ளனர். இதையடுத்து, இருவரையும் தங்களது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். சிறிது தூரம் சென்றதும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு, 16 வயது சிறுமியை இருவரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மேலும், சிறுமியிடமும், அவரது தங்கையிடமும் இதுபற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால், கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதையடுத்து, அவர்கள் இருவரையும் மீண்டும் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது, சிறுமியின் தங்கை வாகனத்தில் இருந்து கீழே குடித்து கத்தி கூச்சலிட்டுள்ளார்.

இதைப் பார்த்த மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் விரைந்து வந்து இருவரையும் சுற்றி வளைத்தனர். பின்னர், சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, போலீஸ் எனக்கூறி அவரை கூட்டு பலாத்காரம் செய்த சோனு குமார் மற்றும் சுனித் குமார் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read More : “என்னை கொல்ல போறாங்க.. நீ சீக்கிரமா வா”..!! பெற்ற மகளை ஆவணக்கொலை செய்த தந்தை..!! காதலனால் சிக்கிய குடும்பம்..!!

CHELLA

Next Post

பாகிஸ்தான் சுதந்திர தின கொண்டாட்டத்தில் துப்பாக்கிச் சூடு!. சிறுமி உட்பட 3 பேர் பலி!. பலர் காயம்!

Thu Aug 14 , 2025
பாகிஸ்தானின் கராச்சியில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதிலும் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், கராச்சியில் நடந்த வெவ்வேறு கொண்டாட்ட நிகழ்வுகளில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில், 8 வயது சிறுமி உட்பட 3 பேர் பலியாகினர். பல்வேறு பகுதியில் இருந்து 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். […]
Independence Day karachi gun shoot 11zon

You May Like