மாமன் மகனுடன் கள்ள உறவு..!! நேரில் பார்த்த தாய்..!! செப்டிக் டேங்கில் கிடந்த எலும்பு..!! வீட்டு உரிமையாளரால் அம்பலமான உண்மை..!!

Murder 2025

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த இளத்தூர் கிராமத்தில் சினிமாவை மிஞ்சும் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியிருக்கிறது. 30 வயதான பேச்சியம்மாள் என்பவரது கணவர் கோவையில் எலக்ட்ரிஷியன் வேலை பார்த்து வந்த நிலையில், அந்தப் பெண் எதிர்வீட்டில் வசித்த தனது மாமன் மகன் மாடசாமியுடன் கள்ள உறவில் இருந்து வந்துள்ளார்.


இந்த கள்ளக்காதல் ஜோடி, வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனைக் கவனித்த மாடசாமியின் தாய் இருவரையும் கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால், பேச்சியம்மாளின் கணவனிடம் இதுபற்றித் தெரிவித்தும், அவர் மனைவியின் மீது கொண்ட நம்பிக்கையால் அதை அலட்சியப்படுத்தியுள்ளார்.

ஒரு கட்டத்தில், மாடசாமி பேச்சியம்மாளை கணவன் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு தன்னுடன் வந்துடுமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு பேச்சியம்மாள் மறுத்த நிலையில், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருநாள், பேச்சியம்மாள் மாடசாமியை தனது வீட்டிற்கு அழைத்து, இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

அப்போது, அவரை ஒரு நாற்காலியில் கட்டிப்போட்டு, தலையணையால் முகத்தை அழுத்தி கழுத்தை நெறித்துக் கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த கொலையை மறைப்பதற்காக, தனது தாய் மாரியம்மாள் மற்றும் 17 வயது சகோதரனின் உதவியுடன், மாடசாமியின் உடலை அவரது வீட்டின் அருகிலேயே உள்ள செப்டிக் டேங்கில் போட்டு மூடியுள்ளனர்.

கொலை நடந்து 8 மாதங்களுக்குப் பிறகு, பேச்சியம்மாள் குடியிருந்த வீட்டை அதன் உரிமையாளர் புதுப்பிக்க சென்றபோது, செப்டிக் டேங்கில் எலும்புக் கூடுகளை பார்த்துள்ளார். இதையடுத்து, போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில், இறந்தது மாடசாமி என்றும் அவரை கொலை செய்தது பேச்சியம்மாள், அவரது தாய் மற்றும் சகோதரன் ஆகியோர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : இன்ஸ்டாவில் அறிமுகமான இளம்பெண்ணுடன் லிவிங் டு கெதர்..!! ரகசிய உறவால் ஆற்றில் மிதந்த சடலம்..!! செல்ஃபியால் சிக்கிக் கொண்ட காதலன்..!!

CHELLA

Next Post

ஆடையின்றி நிர்வாணமாக கிடந்த 23 வயது இளம்பெண் உடல்..!! பிறப்புறுப்பில் தீக்காயம்..!! ஆடிப்போன கிராம மக்கள்..!!

Mon Sep 22 , 2025
உத்தரப்பிரதேச மாநிலம், காஜிபூர் மாவட்டத்தில் 23 வயது இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் அருகே உள்ள வனப்பகுதியில், அந்தப் பெண் ஆடைகள் இல்லாமல் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது கழுத்து, தொடை மற்றும் பிறப்புறுப்புப் பகுதிகளில் தீக்காயங்கள் இருந்ததை கண்டு உள்ளூர் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இறந்த பெண் வாரணாசியைச் சேர்ந்த தீப்தி என்றும் அவரது கணவர் சந்தீப் சிங் என்பதும் […]
death

You May Like