அந்த ஏழு நாட்கள், கன்னி பருவத்திலே, அச்சமில்லை அச்சமில்லை போன்ற படங்களில் நடந்து புகழ்பெற்ற நடிகர் ராஜேஷ் காலமானார்.
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ராஜேஷ். அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.. அதற்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு திரையுலகிலும் நடித்துள்ளார். வெள்ளித்திரை நடிகர் மட்டுமின்றி டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்தவர் நடிகர் ராஜேஷ்.
சமீபத்தில் கார்த்திகை தீபம் தொடரில் தந்தை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். 150க்கும் மேலான படங்களில் நடித்து கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்து வந்தார். தற்போது 75 வயதாகும் நடிகர் ராஜேஸ்-க்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரித்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை பூர்வீகமாக கொண்ட ராஜேஷ்க்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். நடிகராக மட்டுமல் அல்லாமல் ஹோட்டல் துறையிலும் கால் பதித்தவர். நடிகராகவும் தொழில் அதிபராகவும் அறியப்பட்ட ராஜேஷ் ஜோதிடராகவும் அறியப்பட்டார்.
Read more: Gold rate: இறங்கு முகத்தில் தங்கம் விலை.. 2 நாளில் ரூ.800 குறைவு..!! இனி தொடர்ந்து குறையுமா..?