பிரபல நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்..

a4057 0

நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி இன்று காலமானார். அவருக்கு வயது 99.

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி என்ற கிராமத்தை சேர்ந்தவர் கருப்பாயி. பல நாட்டுப்புற பாடல்களை பாடிய இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆண் பாவம், கோபாலா, கோபாலா, ஆயுசு நூறு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் நாட்டுப்புற இசைத்துறையில் முக்கியமானவர்களில் இவரும் ஒருவர். 1000-க்கும் மேற்பட்ட மண்ணிசை பாடல்களை இவர் பாடியுள்ளார். பின்னர் வந்த பல்வேறு இசை கலைஞர்களுக்கு முன்னுதாரணமாக இவர் திக்ழந்தார்.


அனைத்திந்திய வானொலியில் நிகழ்ச்சி நடத்துனராக தனது பணியை தொடங்கிய இவர் 30 ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். 1993-ம் ஆண்டு தமிழக அரசு கொல்லங்குடி கருப்பாயிக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது.

இந்த நிலையில், கொல்லங்குடி கருப்பாயி வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். சிவகங்கையின் கொல்லங்குடியில் உள்ள தனது வீட்டில் அவர் உயிரிழந்ததார். அவரின் மறைவு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read More : இயக்குநரிடம் பேரம்.. சில்க் ஸ்மிதாவை ரவுண்டு கட்டிய ஊர் பண்ணையார்கள்..!! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த களேபரம்..

English Summary

Kollangudi Karupai, who won the Kalaimamani award for her work in Tamil films, passed away today at the age of 99.

RUPA

Next Post

மாறி மாறி மோதிக்கொள்ளும் இஸ்ரேல், ஈரான்.. போர் விளிம்பில் மத்திய கிழக்கு.. என்ன நடக்கிறது?

Sat Jun 14 , 2025
There is a risk of war in the Middle East as Israel and Iran alternately attack each other.
Israel Iran War

You May Like