தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் சுதிர் வர்மா இன்று தற்கொலை செய்து கொண்டார்.
சமீப காலமாக திரை பிரபலங்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.. இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் உள்ள தனது வீட்டில் தெலுங்கு நடிகர் சுதிர் வர்மா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.. சில தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன..

சுதீர் வர்மாவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சுதீரின் இறுதிச் சடங்கு இன்று அல்லது நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
செகண்ட் ஹேண்ட், குண்டனப்பு பொம்னா போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் சுதிர் வர்மா. இதுதவிர பல வெப் சீரிஸிலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..