கூட்டுறவுத் துறையில் பயிர்க்கடனுக்கு சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்குவது தொடர்பாக கூட்டுறவுத் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளர்ப்பு போன்றவற்றுக்கு கடன் வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடன் வழங்குவது தொடர்பாக கூட்டுறவுத்துரை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது. அதில், ”சிபில் ஸ்கோர் அடிப்படையில் பயிர் கடன் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த சூழலில் தான், கூட்டுறவுத்துறை தற்போது புதிய விளக்கம் அளித்துள்ளது. அதில், சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்க அறிவுறுத்தல் வழங்கப்படவில்லை. இதர வங்கிகளில் இந்தத் திட்டத்தில் கடன் தரப்படவில்லை மற்றும் கடன் நிலுவை இல்லை என்பதை உறுதி செய்ய மட்டுமே சிபில் ஸ்கோர் பயன்படுத்தப்படும். பயிர் கடன் பெறும் விவசாயி ஏற்கனவே பயிர் கடன் பெற்றுள்ளாரா என்பதை தெரிந்து கொள்ளவே சிபில் ஸ்கோர் பார்க்கப்படுகிறது.
அப்படி, விவசாயி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்கனவே பயிர் கடன் வாங்கியிருந்தால், கூட்டுறவு வங்கிகளில் பெறும் பயிர் கடனுக்கு வட்டி மானியம் பெற முடியாது. இந்த வட்டி மானியம் சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு பெரும் இழப்பாகும். இதன் அடிப்படையில் மட்டுமே அந்த சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது” என விளக்கம் அளித்துள்ளது.
Read More : டிகிரி முடித்திருந்தால் போதும்..!! மத்திய அரசு வேலை ரெடி..!! மாத சம்பளம் எவ்வளவு..? உடனே அப்ளை பண்ணுங்க..!!