விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க..!! மானிய விலையில் பவர் டில்லர்..!! விண்ணப்பிப்பது எப்படி..? ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வேளாண் எந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் உழவு பணிகளுக்கு இரண்டாவது தவணையாக பொதுப்பிரிவினருக்கு 53, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 20 என்று மொத்தம் 73 பவர்டில்லர் எந்திரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு, பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆகிய விவசாயிகளுக்கு 50 சதவீதம், இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.


மேலும், 2022-23-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களில் முன்னுரிமை அடிப்படையில் பின்னேற்பு மானியம் வழங்கப்படுகிறது. பின் ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம் வழங்கப்படுகிறது. பவர்டில்லர் எந்திரம் பெற விருப்பமுள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், சிறு, குறு விவசாய சான்று, ஆதார் அட்டை நகல், பவர்டில்லர் எந்திரத்தின் விலைப்புள்ளி, வங்கிக்கணக்கின் முதல் பக்கம் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளாக இருப்பின் சாதி சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

இதனை வேலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடி தந்தை பெரியார் அரசு பாலிடெக்னில் கல்லூரி எதிரே உள்ள வேளாண் பொறியியல் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம் என்ற தகவலை அம்மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

CHELLA

Next Post

25,000 அரசு ஊழியர்கள் ஓய்வு..!! ஆசிரியர்கள் நியமனம் குறித்து அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!

Mon Jun 12 , 2023
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய் கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி திரும்பிய மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கடந்த இரண்டு ஆண்டு தேர்ச்சி விகிதம் எப்படி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். தற்போது அதனை நடப்பாண்டு முறியடிக்கும் விதமாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இலக்கு நிர்ணயம் செய்து கொண்டு செயல்பட […]
Anbil 4

You May Like