நிலவில் நீர் உள்ளதா இல்லையா என ஆராய்ச்சியில் ஈடுபட்டு நீர் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது மிகப்பெரிய விஷயம் எனவும் விரைவில் நிலவில் விவசாயம் செய்யலாம் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
திருச்சி ஆண்டார் வீதியில் தனியார் கல்லூரியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மயில்சாமி அண்ணாதுறை விழாவில் பேசினார். அப்போது சந்திராயன் திட்டத்தின் முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுறை கூறுகையில் ’’ போட்டிகள் நிறைந்த உலகில் மேற்படிப்பு என்பதைத் தாண்டி வேலைக்கு செல்வதற்கு கூட போட்டித் தேர்வுகள் என்பது அவசியமாக உள்ளது. அதற்கு தேவையான பயிற்சிகளை சாம் செய்தால்தான் இந்திய அளவில் தமிழக மாணவர்களால் முன்னேற முடியும் என அவர் பேசினார் .
அறிவியல் ரீதியாக நிலவு எப்படி உருவானது என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளார்கள் . பூமியில்இருந்து நிலவு பிரிந்து உருவானதா? அல்லது நிலவில்இருந்து பூமி உருவானதா ? வேறு எப்படி உருவானது என ஆய்வு செய்தபோது ஒவ்வொரு கிரகங்களிலும் என்ன தனிமங்கள் அதிகமாக உள்ளது என ஆய்வு செய்கின்றார்கள்.
நிலவில் தண்ணீர் உள்ளது என்பதை சந்திராயன் 2 வாயிலாக பார்த்தோம். சந்திராயன் 3 வழியாக தரையில் இறங்கி ஆய்வு செய்யும் வகையில் நாம் தொழில்நுட்ப ரீதியாக திட்டமிட வேண்டும். 50 நாட்களுக்கு முன்பு விண்வெளிக்கு மனிதன் சென்றபோது போட்டிக்காக சென்றான் தற்போது போட்டிகளுக்காக பயணிப்பதில்லை. பல்வேறு ஆய்வுகளுக்காக பயணிக்கின்றார். விரைவில் நிலவில் மனிதர்களால் விவசாயம் செய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.