குருவின் அருளைப் பெற வியாழக்கிழமை விரதம்..!! என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா..?

Poojai 2025 2 1

வியாழக்கிழமை குரு பகவானின் அருளைப் பெறுவதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில், எந்த ஒரு புதிய கலையையும் கற்றுக்கொள்ளத் தொடங்குவது குருவின் அருளால் சிறப்பாக அமையும். தியானப் பயிற்சி, ஜோதிடம் பார்த்தல் மற்றும் ஆலய தரிசனம் போன்ற ஆன்மீக செயல்கள் தொடங்கவும் இது ஒரு சிறந்த நாள்.


வாரத்தின் 7 நாட்களில் வியாழக்கிழமை குரு பகவானுக்குரிய நாள். எந்த ஒரு மாதத்திலும் வளர்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். ஒரு வருடத்தில் தொடர்ந்து 16 வளர்பிறை வியாழக்கிழமைகளில் விரதம் இருப்பது மிகுந்த நன்மைகளைத் தரும். 3 ஆண்டுகள் இந்த விரதத்தை முறையாகக் கடைபிடிப்பவர்களுக்கு குரு பகவானின் முழுமையான அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

வியாழக்கிழமை விரதம் மேற்கொள்ளும் நாளில், அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, மஞ்சள் நிற ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும். எதுவும் உண்ணாமல் அருகில் உள்ள கோவிலில் உள்ள நவகிரக சந்நிதிக்குச் சென்று குரு பகவானுக்கு மஞ்சள் நிறப் பூக்கள், இனிப்புகள், சந்தனம் மற்றும் குங்குமப்பூ கலந்த பால் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

விரதம் இருக்கும் நாள் முழுவதும் உணவைத் தவிர்ப்பது நல்லது. அன்றைய தினம் குரு பகவானுக்குரிய மந்திரங்கள் மற்றும் ஸ்தோத்திரங்களை உச்சரிப்பது பலன் தரும். மாலையில் மஞ்சள் நிற இனிப்புகள் மற்றும் ஆடைகளை ஏழைகளுக்கு தானம் செய்வது சிறந்தது. இரவில் உப்பு சேர்க்காத உணவை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

குரு பகவானுக்குரிய இந்த விரதத்தை முறையாகக் கடைபிடிப்பவர்களுக்கு வாழ்வில் பல நன்மைகள் உண்டாகும். சரியான நேரத்தில் திருமணம் நடைபெறும், ஜாதகத்தில் உள்ள குரு தோஷங்கள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் வருமானம் குறைவாக உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைபிடிப்பதன் மூலம் செல்வ வளம் பெருகும். மேலும், எதிர்பாராத நல்ல வாழ்க்கை அமையவும் இது வழிவகுக்கும்.

Read More : குலதெய்வத்தின் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா..? குலதெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்யலாம்..?

CHELLA

Next Post

சொத்துக்களை பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகம் செல்ல தேவையில்லை..!! வீட்டிலிருந்தே வேலையை முடிக்கலாம்..!!

Thu Sep 4 , 2025
தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறை சொத்துப் பதிவு நடைமுறையை மேலும் எளிமையாக்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன் மூலம், இனி சொத்துகளைப் பதிவு செய்ய வாங்குபவர்களும், டெவலப்பர்களும் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்லத் தேவையில்லை. ‘பிரசன்ஸ்லெஸ்’ (Presenceless) என்று அழைக்கப்படும் இந்த புதிய வசதி, முதற்கட்டமாகப் புதிய சொத்து விற்பனைப் பதிவுகளுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த புதிய முறையில், விற்பனையாளர்களும், டெவலப்பர்களும் தேவையான அனைத்து ஆவணங்களையும் […]
Registration Department

You May Like