1990ம் ஆண்டில் வெறும் ரூ.1 லட்சத்துக்கு தந்தை வாங்கிய பழைய பங்குச் சான்றிதழ்கள் மூலம் தற்போது மகன் ரூ.80 கோடிக்கு அதிபதியான சுவாரஸிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சமூக ஊடகங்களில் இதுபோன்ற செய்திகளை நாம் அடிக்கடி படிக்கிறோம், அதில் ஒருவரின் தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிறுவனத்தின் சில பங்குகளை வாங்கியதாகவும், இன்று அந்தப் பங்குகளின் மதிப்பு கோடிகளில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது ரெடிட்டில் பகிரப்பட்ட இந்த சுவாரஸிய சம்பவத்தை சவுரவ் தத்தா என்பவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், 1990களில் தனது தந்தை ஜிண்டால் விஜயநகர் ஸ்டீல் லிமிடெட் (இப்போது JSW ஸ்டீல்) பங்குகளில் வெறும் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தது தொடர்பான பழைய சான்றிதழ்களை கண்டுபிடித்தேன். இன்றைய விலையில் அதன் மதிப்பைக் கண்டதும், நான் வியப்படைந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையதளத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சில பயனர்கள், இந்த பழைய பங்கு சான்றிதழை கண்டுபிடித்தப்பிறகு அந்த நபரின் வாழ்க்கையே மாறும் என்பதை அவர் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார் என்று பதிவிட்டு வருகின்றனர்.
JSW ஸ்டீல் லிமிடெட் இந்தியாவில் முன்னணி எஃகு உற்பத்தியாளர்களில் ஒன்றாக உள்ளது. JSW குழுமத்தின் ஒரு அங்கமாக இது செயல்பட்டு வருகிறது. JSW ஸ்டீல் லிமிடெட் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் ஆலைகளை நிறுவி எஃக் தயாரித்து வருகிறது.தற்போதைய நிலவரப்படி, நிறுவனத்தின் பங்கு விலை சுமார். 1004.90 ஆக உள்ளது.சந்தை மூலதனம், ரூ.2.37 டிரில்லியன் ஆகும். அதன்படி, இதன் பங்குகள் பல ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க வளர்ச்சியை நோக்கி செல்கிறது.
முதலீட்டில் கூட்டுத்தொகை என்றால் என்ன? கூட்டுத்தொகை என்பது வட்டிக்கு வட்டியைக் குறிக்கிறது. அதாவது, நீங்கள் எந்த முதலீடு செய்தாலும், அதிலிருந்து நீங்கள் எவ்வளவு வருமானத்தைப் பெற்றாலும், அடுத்த முறை அந்த வருமானத்திற்கும் வட்டி கிடைக்கும். இந்தச் சுழற்சி மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கும், படிப்படியாக உங்கள் மூலதனம் ஒரு பனிப்பந்து போல அதிகரிக்கிறது.
உதாரணமாக, நீங்கள் 1 லட்ச ரூபாயை 12% வருடாந்திர வருமானத்தில் 30 ஆண்டுகளுக்கு விட்டுச் சென்றால், அந்தத் தொகை சுமார் 30 லட்ச ரூபாயாக மாறக்கூடும். ஆனால் நிறுவனம் தொடர்ந்து போனஸ் கொடுத்துக் கொண்டே இருந்தால், ஈவுத்தொகை வந்து, பங்குப் பிரிப்புகள் நடந்தால், இந்தத் தொகை பல கோடிகளை எட்டும்.
Readmore: Rain Alert: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி..! இன்று 7 மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு..!