5 மாத குழந்தையை கொடூரமாக சித்ரவதை செய்த தந்தை..!! கை, கால்களை முறித்து வெறிச்செயல்..!!

அசாம் மாநிலம் கௌகாத்தியில் கஹிலிபர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அல்கேஷ் கோஸ்வாமி என்பவர் வசித்து வருகிறார். இவர், தன்னுடைய 5 மாத மகனின் கை, கால்களை முறித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். தன்னுடைய மனைவிக்கு தெரியாமல் பிறந்து 5 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தையின் இரு கைகளையும் முறித்து ஒரு காலையும் உடைத்துள்ளார். தொடர்ந்து குழந்தை இரண்டு நாட்களாக அழுது கொண்டே இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தை அனுமதிக்கப்பட்டது.


அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் இரு கைகளும், ஒரு காலும் முறிந்து இருப்பதாக கூறியுள்ளனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அல்கேஷிடம் விசாரித்ததில் அவர் தன் குழந்தையின் கை கால்களை முறித்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, புகாரின் பேரில் அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையின் கை கால்களை எதற்காக முறித்தார் என்ற காரணம் இதுவரை தெரியவில்லை. பச்சிளம் குழந்தையை ஈவு இரக்கம் பாராமல் பெற்ற தந்தையே கொடுமைப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CHELLA

Next Post

கோவில் அருகே விளையாடிய சிறுவன்! லவ்ட் ஸ்பீக்கர் பெட்டி தவறி தலையில் விழுந்து 8 வயது சிறுவன் பலி!

Sun Mar 5 , 2023
திருச்சி அருகே உள்ள வளநாடு பகுதியில் விளையாடு கொண்டிருந்த சிறுவனின் மீது ஒலிபெருக்கி பெட்டி விழுந்ததில் எட்டு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் வளநாடு அருகே உள்ள தேனூர் கிராமத்தைச் சார்ந்தவர் விவசாயி சுப்பிரமணி. இவருக்கு எட்டு வயதில் நித்திஷ் பாண்டியன் என்ற மகன் இருந்தான். அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவன் வெள்ளிக்கிழமை […]
IMG 20230305 WA0103

You May Like