17 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை..!! காதலன் மீது பழி போட சிறுமி..!! கடைசியில் நடந்த திடீர் திருப்பம்..!!

Rape 2025 5

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய தேங்காய் வியாபாரி ஒருவர், தனது 17 வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.


அந்த வியாபாரிக்கு மனைவியும், பிளஸ்-2 படிக்கும் 17 வயது மகளும், ஒரு மகனும் உள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு, அந்தச் சிறுமிக்குத் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. 18 வயது பூர்த்தியடையாத சிறுமி குழந்தை பெற்றெடுத்ததால், மருத்துவமனை நிர்வாகத்தினர் உடனடியாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து விசாரித்தபோது, சிறுமியுடன் அவரது தந்தை மட்டுமே உடனிருந்தது தெரிய வந்தது. மேலும், சிறுமி பெற்றெடுத்த குழந்தையைத் தந்தையின் உதவியுடன் கேரள அரசின் ‘அம்மா தொட்டில்’ திட்டத்தில் ஒப்படைத்ததும் போலீசாருக்குத் தெரிய வந்தது.

போலீசார் சிறுமியிடம் விசாரித்தபோது, தனது கர்ப்பத்திற்கு காரணம் காதலன் என்று சிறுமி ஆரம்பத்தில் கூறிவந்தார். ஆனால், காதலன் பெயரைச் சொல்ல மறுத்ததால், போலீசாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவர் அளித்த பதில்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால், போலீசார் சிறுமியை அப்பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்க வைத்து, கர்ப்பத்திற்கு காரணம் யார் என்று தீவிர விசாரணை நடத்தினர்.

போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் வேறு யாருமல்ல, அவரது தந்தையே என்பது தெரிய வந்தது. வீட்டில் சிறுமி தனியாக இருக்கும்போது, தந்தை அவரைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானதை அறிந்த தந்தை, இந்த ரகசியம் மனைவி மற்றும் மகனுக்கு தெரியாமல் இருக்க, மகளை திருவனந்தபுரம் அழைத்துச் சென்று தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். குழந்தை பிறந்த பிறகு, அதைச் சட்டப்பூர்வமாக ‘அம்மா தொட்டில்’ திட்டத்தில் கொடுத்துள்ளார்.

ஆனாலும், தந்தை மீது இருந்த பாசத்தால், சிறுமி உண்மையை சொல்லாமல், காதலன் தான் காரணம் என்று சொல்லி வந்துள்ளார். போலீசாரின் தொடர் விசாரணையைத் தாங்க முடியாமல், இறுதியாக தனது தந்தையே காரணம் என்பதைச் சிறுமி ஒப்புக்கொண்டார். இதையடுத்து, மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார், அந்தத் தேங்காய் வியாபாரியை முந்தைய இரவு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் குடும்ப வன்முறை மற்றும் பாலியல் சீண்டலின் கொடூர முகத்தை பதிவு செய்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read More : வங்கக் கடலில் மீண்டும் உருவாகிறது புயல்..!! இனிமே தான் தமிழ்நாட்டில் ஆட்டமே இருக்கு..!! பிரதீப் ஜான் எச்சரிக்கை..!!

CHELLA

Next Post

கார் மீது தாறுமாறாக வந்து மோதிய லாரி..!! 4 பேர் துடிதுடித்து உயிரிழந்த சோகம்..!! 5 பேர் கவலைக்கிடம்..?

Sun Nov 16 , 2025
ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பட்காம் மாவட்டத்தில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர சம்பவம், பட்காம் மாவட்டத்தின் பலார் பகுதியை நோக்கி நெடுஞ்சாலையில் கார் ஒன்று பயணித்துக் கொண்டிருந்தபோது நிகழ்ந்தது. அக்கார் மீது, எதிரே வந்த லாரி ஒன்று திடீரென […]
Accident 2025 3

You May Like