இன்று பிற்பகல் ராஷ்டிரபதி பவனின் 31வது வாயில் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்தனர் என்று டெல்லி தீயணைப்பு சேவைகள் (DFS) அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரண்டு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்களிலிருந்து தீ விபத்து ஏற்பட்டதாக மதியம் 1:51 மணிக்கு தகவல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்..
உடனடியாக 5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன, மேலும் 20 நிமிடங்களுக்குள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று அதிகாரி மேலும் கூறினார். இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. “நாங்கள் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். பிற்பகல் 2:15 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது” என்று தீயணைப்புத்துறை அதிகாரி கூறினார்.
Read More : H-1B விசா கட்டணம் இல்லை.. இந்திய தொழில் வல்லுநர்கள், மாணவர்களுக்கு குட்நியூஸ்..



