பயணிகளுடன் பறந்த முதல் மின்சார விமானம்.. டிக்கெட் கட்டணம் வெறும் ரூ.700 மட்டும் தான்..!!

electric plane

அமெரிக்காவின் பீட்டா டெக்னாலஜிஸ் நிறுவனம் தயாரித்துள்ள Alia CX300 மின்சார விமானம், பயணிகளை ஏற்றிச் செல்லும் முதல் முழு மின்சார விமானமாக வெற்றிகரமாக செயல்பட்டு விமானத்துறையில் புதிய வரலாற்றை எழுதியுள்ளது.


இந்த மாத தொடக்கத்தில், கிழக்கு ஹாம்ப்டனில் இருந்து நியூயார்க் நகரிலுள்ள ஜான் எஃப் கென்னடி (JFK) விமான நிலையத்திற்கு நான்கு பயணிகளுடன் பறந்த இந்த விமானம், சுமார் 30 நிமிடங்களில் 70 கடல் மைல்கள் (130 கிலோமீட்டர்) தூரத்தை கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானப் பயணத்தின் மொத்த எரிபொருள் செலவு வெறும் ரூ.694 ($8) மட்டுமாக இருந்தது. இதே தூரத்தை ஹெலிகாப்டரில் பயணிக்க ரூ.13,885 ($160) வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சத்தமில்லாத இயந்திர அமைப்பு மற்றும் ப்ரொப்பல்லர்கள் இல்லாததால் பயணிகள் பறக்கும் நேரத்தில் எளிதாக உரையாட முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீட்டா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO கைல் கிளார்க் இதுகுறித்து கூறியதாவது: “இது 100% மின்சார விமானம். கிழக்கு ஹாம்ப்டனில் இருந்து JFK-க்கு பயணிகளுடன் பறந்தது இது முதன்முறை. சுமார் 35 நிமிடங்களில் 70 கடல் மைல்களை கடந்தோம். இதற்கான சார்ஜிங் செலவு வெறும் 700 மட்டுமே.” என்றார்.

வெர்மான்ட் மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்ட பீட்டா டெக்னாலஜிஸ் நிறுவனம் 2017-இல் தொடங்கப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளாக CX300 மற்றும் Alia 250 eVTOL ஆகிய மின்சார விமான மாதிரிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 கடல் மைல்கள் வரை பறக்கக்கூடிய திறன் கொண்ட இந்த மின்விமானம், நகரங்களுக்கும் புறநகரங்களுக்கும் இடையிலான குறுகிய தூரப் பயணங்களுக்கு வரவேற்கத்தக்க மாற்றாக அமையும் என நிறுவனம் தெரிவிக்கிறது.

இதற்கிடையில், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிற்கான அதிகாரப்பூர்வ பறக்கும் டாக்ஸி சேவையளிக்க ஆர்ச்சர் ஏவியேஷன் (Archer Aviation) நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. FAA சான்றிதழ் இன்னும் பெறப்படவில்லை என்றாலும், 2026-ல் சேவையைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மின்சார விமானத் தொழில்நுட்பத்தில் இதுவே முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

Read more: Wow.. சென்னையில் பஸ், மெட்ரோ, ரயில் மூன்றுக்கும் ஒரே டிக்கெட்.. எப்போது முதல்?

Next Post

ஒன்றரை வருடங்களாக கொகைன் போதைப் பொருள் பயன்படுத்திய ஸ்ரீகாந்த்.. பல பிரபலங்களுக்கும் தொடர்பு?

Tue Jun 24 , 2025
In the drug use case, information has emerged during the investigation that actor Srikanth had been using cocaine for one and a half years.
44067562 chennai 07 1 1

You May Like