குஜராத்தின் மெக்சானா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் முதல் சூரிய சக்தி கிராமத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார்.
மெக்சானா மாவட்டத்தில் மெதேரா என்ற கிராமம் உள்ளது. 1026-27ல் சாளுக்கிய மரபைச் சேர்ந்த மன்னரால் புகழ்பெற்ற சூரிய கோயில் கட்டப்பட்டது. இக்கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட வீடுகளில் சூரிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சோலார் பேனர்கள் இலவசமாக தற்போது பொருத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க மோடியின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். பல்வேறு நலத்திட்டங்கள் குஜராத்தில் செயல்படுத்தப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.