முதலில் இந்த பொருட்களை வீட்டில் இருந்து தூக்கிப்போடுங்கள்!. வறுமை நீங்கும்!.

house waste things 11zon

என்ன செய்தால் நம்முடைய வீட்டில் விரைய செலவை தடுக்கலாம் என்ன செய்தால் நிதி நெருக்கடி பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்று ஆன்மீக ரீதியாக கூறப்பட்டுள்ளது. நம்முடைய வீட்டில் இருக்கக் கூடாத சில பொருட்களை நாம் தெரியாமலேயே வைத்துக் கொண்டிருப்போம். வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்கள் எதிர்மறை ஆற்றல்களை வெளிப்படுத்துவதால் தடைகளை ஏற்படுத்தும் எனவே எந்தெந்த பொருட்களை வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்று பார்க்கலாம்.


பழைய சைக்கிள்கள், பழைய டிவி ரேடியோ, இரும்பு பொருட்கள் என உடைந்த பொருட்களைக் கூட ஏதோ ஞாபகத்திற்கு வீட்டிற்குள் வைத்திருப்பார்கள். துருப்பிடித்த இரும்பு பொருட்கள், பழைய சுவாமி படங்கள், காலண்டர் அட்டைகள், பூஞ்சை பிடித்த பேப்பர்கள், சேதமடைந்த மரக்கலன்கள், உடைந்த சுவாமி சிலைகள், கிழிந்து போன துணிமணிகள், ஓட்டை உடைசல்கள் என்று நமக்கு பயன்படாத பொருட்களை குப்பை போல சேர்த்துக் கொள்ளாமல் தூக்கி வீசி விடுங்கள். நம்முடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும் வறுமை நீங்கி செல்வ வளம் அதிகரிக்கும்.

கண்ணாடி மகாலட்சுமியின் அம்சம் எனவேதான் நம்முடைய வீட்டில் கண்ணாடி உடைந்தாலே பதறுவார்கள். எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அது கண்ணாடி பொருளாக இருந்தால் கண்டிப்பாக உடைய கூடாது. கண்ணாடி உடைந்த போட்டோ பிரேம்களை வீட்டில் வைத்திருக்கக் கூடாது. முகம் பார்க்கும் கண்ணாடி உடைந்தால் அதை குப்பையில் வீசி விட வேண்டும்.

சிலர் பழைய கடிகாரங்களை வீட்டிற்குள் வைத்திருப்பார்கள். அழகுக்காக பழைய கடிகாரங்களை சுவற்றில மாட்டியிருப்பார்கள். கடிகாரங்கள் எப்பொழுதும் வீட்டில் ஓடிக்கொண்டே இருந்தால்தான் வீடு சுபீட்சமாக இருக்கும். வீடு மகிழ்ச்சிகரமாக இருக்கும். கடிகாரம் நின்று விட்டால் அதை உடனுக்குடன் சரி செய்ய வேண்டியது அவசியம். ஓடாத கடிகாரத்தை வீட்டிற்குள் வைத்துக் கொண்டால் வறுமையை ஏற்படுத்தும் வீட்டில் சண்டை சச்சரவு உருவாகும்.

சிலர் தேவையற்ற பழைய செருப்புகளை அடுக்கி வைத்திரப்பார்கள். அது வீட்டிற்கும் நம்முடைய உடம்புக்கும் ஆகாது. பயன்படாத அறுந்து போன செருப்புகளை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது. இது எதிர்மறை ஆற்றல்களை ஏற்படத்தும். தன்மை கொண்டதாக இருப்பதால் உங்களுக்கு பயன்படாத மற்றும் தேவையற்ற செருப்புகளை வீட்டில் வைத்திருக்காமல் தூக்கி எறிந்து விடுங்கள்.

துடைப்பம் தேய தேய வீட்டில் வருமானம் தேயும் என்கிற ஒரு சாஸ்திரமும் உண்டு. வாஸ்து ரீதியாகவும் தேய்ந்த மற்றும் பயன்படாத துடைப்பங்களை வீட்டில் வைத்திருக்கக் கூடாது. அந்த துடைப்பம் யார் கைக்கும் கிடைக்காமல் வீசி விடுவது நல்லது. பழைய செருப்பு, துடைப்பம், உடைந்த பொருட்களையும் பயன்படாத நிலையில் உள்ள எந்த பொருட்களையும் நீங்கள் வைத்திருக்க வேண்டாம்.

Readmore: வெளியேயும் வெப்பம்; உள்ளேயும் வெப்பம்!. தாங்கமுடியல!. ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

KOKILA

Next Post

எது நாகரிகம்...? தமிழகத்தின் ஒட்டு மொத்த கனிம வளங்களையும் கடத்தி விற்பதா..? அண்ணாமலை காட்டம்

Fri Jun 6 , 2025
கோவில் திருவிழாவுக்கு அதிகளவில் கூட்டம் செல்வதும் உண்மையிலேயே நாகரீகமான சமூகத்திற்கு ஒரு நல்ல அடையாளமாக என்னால் பார்க்க முடியாது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். மேலும் பொது இடங்களில் கூடும் போது, பொதுமக்கள் நம்முடைய அறிவினை பயன்படுத்தி முண்டியடித்து செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களின் இந்த கருத்திற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து […]
annamalai manothangaraj 2025

You May Like