இந்தியாவில் முதல்முறை..!! தங்க ஏடிஎம் மையம் அறிமுகம்..!! எப்படி பயன்படுத்துவது..?

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட் பகுதியில் புதிதாக தங்க ஏடிஎம் மையம் நிறுவப்பட்டுள்ளது.


இந்த தங்க ஏடிஎம்-ஐ கோல்ட்சிக்கா நிறுவனம் அமைத்துள்ளது. இந்த ஏடிஎம் வழியாக பொதுமக்கள் 0.5 கிராம் முதல் 100 கிராம் வரை தங்கத்தை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் சாதாரண ஏடிஎம்களில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன்படுத்துவது போன்றே தங்க ஏடிஎம்களிலும் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்தி தங்க நாணயத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த தங்க ஏடிஎம் ஆனது தங்க உலகில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வரப் போகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் முதல்முறை..!! தங்க ஏடிஎம் மையம் அறிமுகம்..!! எப்படி பயன்படுத்துவது..?

அதன்பிறகு தங்க ஏடிஎம்மில் உள்ள நாணயங்கள் அனைத்தும் தரச் சான்றிதழ் பெற்ற 24 கேரட் தங்கமாகும். இந்த ஏடிஎம் இல் மொத்தம் 3 கோடி மதிப்புள்ள 5 கிலோ தங்கம் வரை வைக்கப்பட்டிருக்கும் நிலையில், opencube technology’s நிறுவனம் இந்த ஏடிஎம் மிஷினை வடிவமைத்துள்ளது. இந்நிலையில், தங்க ஏடிஎம் முதலில் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து பல இடங்களிலும் அமைக்கப்பட இருக்கிறது. மேலும், தங்க பிரியர்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு இந்த ஏடிஎம் ஒரு வரப்பிரசாதம் என்று கூறப்படுகிறது.

CHELLA

Next Post

"இரண்டு லாரிகளுக்கு இடையே சிக்கிய டாட்டா ஏஸ்" 6 பேர் பலி!! திருவண்ணாமலை தீபத்திற்கு சென்று திரும்பிய போது விபத்து..

Wed Dec 7 , 2022
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் என்ற இடத்தில் டாட்டா ஏஸ் வாகனம் வந்த போது முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதியது. அப்போது பின்னால் வந்த கனரக வாகனம், டாடா ஏஸ் மீது மோதியது. இதில் இரண்டு வாகனங்களுக்கும் இடையே சிக்கி டாடா ஏஸ் வாகனம் சுக்கு நூறானதில், அதில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து […]
accident

You May Like