சென்னையில் இன்று தங்கம் விலை உயர்ந்தாலும், வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளது..
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் மீண்டும் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது.. பின்னர் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை தற்போது ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..
இந்த நிலையில் சென்னையில் இன்று காலை தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.12,800க்கு விற்பனையாகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,02,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
எனினும் இன்று காலை வெள்ளி விலை குறைந்துள்ளது.. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ. 4 குறைந்து ரூ.268க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.4000 குறைந்து ரூ.2.68 லட்சத்திற்கு விற்பனையாகிறது. இன்று வெள்ளி விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.



