Flash : கனமழை எதிரொலி.. நாளை இந்த மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!

rain school holiday

கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் -புதுவை கடலோரப்பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயல், நேற்று முன் தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்தது.. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் நகரும் என்று வலுகுறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் இது நகராமல் சென்னை கடற்கரை பகுதியிலேயே 18 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது.. இதனால் நேற்று முன் தினம் முதலே சென்னை, திருவள்ளூர், மற்றும் புறநகர் பகுதிகள் கனமழை கொட்டி தீர்த்தது..


இன்று காலை சென்னை அருகே கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.. இது கடற்கரையை நோக்கி நகரும் போது மேலும் வலுவிழக்க வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இது அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக பலவீனமடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது..

இந்த நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. அதே போல் விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்த நிலையில் கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவித்துள்ளார்.. தொடர் மழை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி நாளை ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்..  

Read More : பொங்கலுக்கு ரூ.2,000 பரிசுத்தொகை? விரைவில் தமிழக அரசின் சர்ப்ரைஸ் அறிவிப்பு..!

RUPA

Next Post

'ஜெய்ஷ் இ, வெள்ளை காலர் பயங்கரவாதப் பிரிவிலிருந்து எச்சரிக்கை': பெங்களூரு போலீசாருக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Tue Dec 2 , 2025
பெங்களூரு நகர காவல் ஆணையரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு நவம்பர் 30-ம் தேதி வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் மற்றும் நகரத்தில் உள்ள பல மால்களை ‘வெள்ளை காலர் பயங்கரவாத குழு’ குறிவைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பிலிருந்து இந்த மிரட்டல் அனுப்பப்பட்டதாக அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.. ‘மோஹித் குமார்’ என்ற பெயரில் உள்ள மின்னஞ்சல் முகவரியிலிருந்து வந்த வெடிகுண்டு மிரட்டலில், “இது ஜெய்ஷ்-இ-முகமது […]
new bomb

You May Like