FLASH | நள்ளிரவில் பயங்கரம்..!! ஸ்கூட்டர் மீது அதிவேகமாக மோதிய பேருந்து..!! தந்தை, தாய், பச்சிளம் குழந்தை பரிதாப பலி..!!

Accident 2026 1

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாலாபேட்டை மேம்பாலத்தில் நிகழ்ந்த விபத்தில், தம்பதியினருடன் சேர்த்து அவர்களது ஒன்றரை வயது பச்சிளம் குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


குளித்தலை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், தங்களது கைக்குழந்தையுடன் ஸ்கூட்டரில் நேற்று இரவு பயணம் செய்துள்ளனர். லாலாபேட்டை மேம்பாலத்தை கடக்க முயன்றபோது, எதிரே அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்ட மூவருக்கும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டதில், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த லாலாபேட்டை போலீசார் விரைந்து வந்து, சடலங்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தை 3 பேர் உயிரிழந்தது, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பேருந்து ஓட்டுநரின் அஜாக்கிரதையே இந்த விபத்திற்குக் காரணமா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : FLASH | அதிரும் அரசியல் களம்..!! இன்று அதிமுகவில் இணைகிறார் காளியம்மாள்..!! குஷியில் எடப்பாடி..!! அதிர்ச்சியில் சீமான்..!!

CHELLA

Next Post

செல்வமகள் சேமிப்பு திட்டத்தை விடுங்க..!! இதில் ரூ.1,000 முதலீடு செய்தால் ரூ.11.57 கோடி வரை கிடைக்கும்..!!

Wed Jan 21 , 2026
பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ‘செல்வமகள் சேமிப்புத் திட்டம்’ இருப்பதைப் போல, ஆண் மற்றும் பெண் என அனைத்துக் குழந்தைகளுக்கும் பயன்படும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஒரு மகத்தானத் திட்டம் தான் ‘NPS வாத்சல்யா’ (NPS Vatsalya) திட்டம். குழந்தைகளின் வருங்காலத்தை நிதி ரீதியாகப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இத்திட்டம், கூட்டு வட்டியின் அபரிமிதமான பலனை முதலீட்டாளர்களுக்கு வாரி வழங்குகிறது. குறிப்பாக, நீண்ட கால சேமிப்பை விரும்பும் பெற்றோருக்கு இது […]
Selva Magal 2025

You May Like