Flash : திடீர் உடல்நலக்குறைவு; மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி..

vaiko

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காய்ச்சல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படும் தலைவர்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ஒருவர்.. தமிழக பிரச்சனைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.. தனது 80 வயதிலும் தொடர்ந்து அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும், போராட்டங்களில் பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மாநிலங்களவை எம்.பியாக இருந்த வைகோவின் பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது.. எனவே அவர் தற்போது கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.


இந்த நிலையில் வைகோ காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. சளி, காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.. சிகிச்சை முடிந்து அவர் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது..

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையும் பல அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தது.. காய்ச்சல் இருந்தால் சுய மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.. மேலும் காய்ச்சல் பாதிப்புகளை தொடர்ந்து கண்காணிக்குமாறு மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.. பொதுமக்கள் முன்னெச்சரிக்கை உடன் நடந்த் கொள்ள வேண்டும் எனவும் குறைந்தபட்ச சமூக இடைவெளியை கடைபிடிப்பது, மாஸ்க் அணிவது போன்ற முன்னெச்சரிக்க நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Read More : கரூர் துயரம் குறித்து இபிஎஸ் பதவி வெறியில் பேசுகிறார்.. டிடிவி தினகரன் காட்டம்..! முதல்வர் நிதானமாக கையாள்கிறார் என பாராட்டு!

English Summary

MDMK General Secretary Vaiko has been admitted to Apollo Hospital in Chennai due to fever.

RUPA

Next Post

1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டாயம்...! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

Sun Oct 5 , 2025
அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் தரநிலை அறிக்கையை பயன்படுத்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: எண்ணும் எழுத்தும் திட்டத்தின்கீழ் நடப்பு கல்வி ஆண்டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தரநிலை அறிக்கை அச்சிட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதை மாணவர் […]
school 2025 2

You May Like