தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!!

தமிழ்நாட்டில் நம்ம பள்ளி திட்டத்திற்கான நிதி உதவி, பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை இணையதளத்தில் மட்டுமே பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு சமூகப் பொறுப்புணர்வு நிதி மற்றும் தனிப்பட்ட பங்களிப்பை பெறுவதற்கு நம்ம பள்ளி என்ற பெயரில் ஒரு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 37,558 அரசுப் பள்ளிகளின் தேவைகள் பூர்த்தி செய்ய வழிவகை செய்யப்படுகிறது. இதற்கு வங்கி கணக்கு உருவாக்கப்பட்ட நடைமுறையில் உள்ளது. இனிவரும் நாட்களில் அரசு பள்ளிகளுக்காக தனிநபர், முன்னாள் மாணவர்கள் வழங்கும் நிதியுதவி, சமூக பொறுப்புணர்வு நிதி போன்ற எந்த வகை நிதி மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டாலும் அது நம்ம பள்ளி இணையதளம் மூலமாக மட்டுமே வழங்கப்படுவதை முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

தலைமை ஆசிரியர்கள் நன்கொடையாளர்கள் மற்றும் நிறுவனங்களுடன் எந்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளக்கூடாது. இதனை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

CHELLA

Next Post

சிலிண்டர் விலை உயர்வு எதிரொலி..!! டீ, காஃபி விலை பல மடங்கு உயர்வு..? பொதுமக்கள் கடும் அதிருப்தி..!!

Fri Mar 3 , 2023
இந்தியாவில் ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில், தற்போது சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பிடமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. நாடு முழுவதும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய 3 நிறுவனங்களும் மக்களுக்கு சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகிறது. இந்த சிலிண்டர் விலையானது எரிபொருள் விலையேற்றத்தின் காரணமாக படிப்படியாக உயர தொடங்கியது. வீட்டு […]

You May Like