மன நோயாளிகளின் நலனுக்காக!… ஒரேநாளில் 8,008 புல்அப்ஸ் எடுத்து உலக சாதனை!… ரூ.4.80 லட்சம் நிதி திரட்டிய இளைஞர்!

ஆஸ்திரேலியாவில், மன நோயாளிகளின் நலனுக்காக தொண்டு நிறுவனத்திற்கு வழங்க இளைஞர் ஒருவர் 24 மணி நேரத்தில் 8,008 புல்அப்ஸ்களை எடுத்து உலக சாதனை படைத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்தவர் ஜாக்சன் இட்டாலியானோ. உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், மன நோயாளிகளின் நலனுக்காக தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்டுவதற்காக அதிக எண்ணிக்கையிலான புல்அப்ஸ்களை எடுக்கத் திட்டமிட்டார்.அதன்படி, 24 மணி நேரத்தில் திட்டமிட்டபடி 8,008 புல்-அப்ஸ்கள் எடுத்து முடித்தார். இதன் மூலம் டாலர் மதிப்பில் 6 ஆயிரம் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 4,80,000 நிதி திரட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஜாக்சன் இட்டாலியானோ தனது நிதி திரட்டல் பக்கத்தில் கூறியுள்ளதாவது: நான் செய்யும் ஒவ்வொரு புல்அப்ஸ்க்கும் 1 டாலர் திரட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளேன். அனைவரது உதவியும் தேவை. என்னுடைய இந்த முயற்சியை அனைவரும் ஆதரிக்க வேண்டும். இதன் மூலம் திரட்டப்படும் அனைத்து நிதியும் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பராமரிப்பாளர்களுக்குப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், முன்னதாக 24 மணி நேரத்தில் 7,715 புல்-அப்ஸ் எடுத்ததே உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது

1newsnationuser3

Next Post

Acer நிறுவனத்தில் மிகப்பெரிய தகவல் திருட்டு.. 160 ஜிபி தரவுகளை விற்பனைக்கு வைத்த ஹேக்கர்கள்..

Fri Mar 10 , 2023
இந்த டிஜிட்டல் காலக்கட்டத்தில் பல்வேறு சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.. அந்த வகையில் தகவல் திருட்டு என்பது தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது.. ட்விட்டர், பேஸ்புக் போன்ற பல முன்னணி தளங்களில் கூட, தனிநபர்கள் தகவல்கள் திருடப்பட்டு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.. இந்நிலையில் பிரபல கணினி தயாரிப்பு நிறுவனமான ஏசர் (Acer) நிறுவனத்தில், 160ஜிபி அளவிலான தகவல்கள் திருடப்பட்டு, அதிக ஏலத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. தங்கள் […]
hackeo acer 160 gb

You May Like