மகாராஷ்டிர மாநிலம் மும்பை அந்தேரி பகுதியை தலைமையிடமாக கொண்டு தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மனிஷ்காந்தி. 34 வயதான இவர் மீது, அந்நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் ஊழியரும், போலந்து நாட்டைச் சேர்ந்தவருமான அம்போலி என்பவர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில், கடந்த 2017ஆம் ஆண்டில் வெளிநாட்டு பெண், மனுஷ்காந்தியுடன் தொழில் சம்பந்தமாக ஜெர்மனி சென்றிருக்கிறார். அப்போது ஜெர்மனியில் ஹோட்டல் அறையில் மனுஷ்காந்தி அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு, பலமுறை அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.
மேலும், இதை யாரிடமாவது சொன்னால், ஆபாச படத்தை இணையத்தில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால், பயந்துபோன அந்த பெண் இது பற்றி வெளியில் யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறார். இந்நிலையில், மனிஷ்காந்தியின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கவே வேறு வழியின்றி போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.