தென்கொரியாவில் கட்டுங்கடங்காமல் பரவிய காட்டுத்தீயால் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்கொரியாவின் கேங்கனியூங் பகுதியில் உள்ள வனத்தில் திடீரென தீப்பற்றியது. அப்பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக அருகில் இருந்த மற்ற வனப்பகுதிகளுக்கும் தீ மளமளவென பரவியது. இதையடுத்து, சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
இந்த தீ விபத்தில் 420 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களும், 10-க்கும் மேற்பட்ட கட்டடங்களும் சேதமடைந்தன. மேலும், இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கிட்டத்தட்ட 6 ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டது.