சினிமா பாணியில் சேஸிங்.. மணல் கடத்தல் லாரியை மடக்கி பிடித்த முன்னாள் அமைச்சர்..!!

Vijayabaskar

சட்டவிரோதமாக மணல் கடத்திய லாரியை சினிமா பாணியில் சுமார் 18 கி.மீ தூரம் காரில் துரத்திச் சென்று அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிடித்துள்ளார்.


கரூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் சட்டவிரோத மணல் கொள்ளை அதிகளவில் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. சமீபத்தி கூட திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் அமைத்த ஸ்பெஷல் டீம், மணல் கடத்தலில் ஈடுபட்ட 26 லாரிகளை மடக்கி பிடித்தது. இந்நிலையில் இன்று சட்டவிரோதமாக மணல் கடத்திய லாரியை 18 கி.மீ தூரம் காரில் துரத்திச் சென்று அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிடித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிக்காக காரில் சென்று கொண்டிருந்த போது மண்மங்கலம் அருகே மணல் கடத்தல் லாரியை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காரில் பின் தொடர்ந்து சென்றுள்ளார். பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலை செக் போஸ்ட்டில் முறைகேடாக மணல் கடத்திச் சென்ற லாரியை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், துரத்திச் சென்று தடுத்து நிறுத்தினார்.

உடனே அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், லாரியை வேலாயுதம்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து மணல் கடுத்தலை திமுக அரசு தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Read more: பாமக பொதுச்செயலாளரை காணவில்லை.. கண்டு பிடித்து கொடுத்தால் ரூ.100 பரிசு..!! – ராமதாஸ்

Next Post

#Breaking : குஜராத்தில் பயணிகள் விமானம் விழுந்து கோர விபத்து.. 242 பயணிகளின் நிலை என்ன?

Thu Jun 12 , 2025
The incident of a passenger plane crashing in Gujarat has caused shock.
cjf5a2m8 plane crash 160x120 12 June 25 1

You May Like