உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான் தப்பை செய்தவன் தண்டனை அனுபவிப்பான் என்பதை மூதாதையர்கள் கூறியுள்ளனர் இது யாராக இருந்தாலும் அமைச்சராக இருந்தாலும் அது பொருந்தும். தான் தூய்மையானவன் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு அவருக்கு உள்ளது ஆனால் இதற்கு திமுக துணை போக கூடாது. செந்தில் பாலாஜி நிரூபிக்கும் வரையில் அமைச்சர் பொறுப்பில் இருந்து அவர் விலகி இருக்க வேண்டும் , செந்தில் பாலாஜி யை அமைச்சரவையில் இருந்து தமிழக அரசு விலக்கி வைப்பது, அரசிற்கும் திமுக விற்கும் மக்களுக்கும் நல்லது அவருக்கு துணை நின்றால் திமுக அரசாங்கம் ஆள்வதற்கு அருகதை அற்றவர்கள் ஆவார்கள், இது 2015 ல் உள்ள பழைய வழக்கு, அப்போது தி.மு.க., வினர் அவர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லியிருந்தார்கள், அதே மனிதன் திமுக வில் வந்தவுடன் கங்கையில் குளித்து புனிதமானவர் என்பதால் திமுக அவரை ஊழல் நிறைந்த சாக்கடை என கூறியது தற்போது கங்கை போல் கூறுகிறார் , தமிழக அரசு அவருக்கு ஆதரவு கொடுக்க கூடாது அப்படி ஆதரவு கொடுத்தால் அது ஊழலுக்கு துணை போகும் செயல்.
முதல்வர் சென்று பார்த்துள்ளார், உண்மையான இதய பிரச்சினை தானா என்று, இதை விட கேவலமான விசயம் வேறில்லை.. திமுக வினர் அவர் முகத்தை பார்க்காமல் இருப்பது செந்தில் பாலாஜிக்கு மன அமைதியை தரும். அறண்டவன் கண்ணிற்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் சிலரின் கருத்து உள்ளது. குற்றம் சுமர்த்தியவர்கள் திமுக வினர். இதற்கு அத்தனைக்கும் காரணம் திமுக., வினர் என்பதை செந்தில் பாலாஜி யின் உறவினர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். திமுக., வின் இந்த வழக்கு தொடர்பாக அழுத்தம் கொடுத்திருப்பார்கள் என சந்தேகம்செந்தில் பாலாஜி தனித்து விடப்பட்டுள்ளார் என்பதை அவரது உறவினர்கள் உணர வேண்டும். இதுவரை தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நேர்மையாக மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து உள்ளது.