அரசு சார்பில் காவல்துறை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு…! ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!

இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; காவல்துறையில் காலியாக உள்ள 621 உதவி ஆய்வாளர் பணியிடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் காலியாக உள்ள 129 நிலைய அதிகாரி பணியிடங்கள் ஆகியவற்றை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNUSRB) இத்தேர்வு நடத்தப்படும்.


இத்தேர்வுகளுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நேற்று முதல் தொடங்கியுள்ளது. பாடக் குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுவதோடு, மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.

இப்பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்களை 8012120115 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை உதவி ஆய்வாளர், தீயணைப்பு நிலைய அலுவலர், இரண்டாம் நிலைக் காவலர் பணிகளுக்கான தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

IMG 20230602 055255

Vignesh

Next Post

இன்று காலை 11 முதல் தருமபுரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்...!

Fri Jun 2 , 2023
தருமபுரியில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டம்‌, தருமபுரி வருவாய்‌ கோட்டத்திற்கு உட்பட்ட வட்டங்களைசார்ந்த விவசாயிகளின்‌ சூறைகளை தீர்ப்பதற்கான குறைதீர்க்கும்‌ கூட்டம்‌ ஒவ்வொரு மாதமும்‌ முதல்‌ வாரத்தில்‌ வெள்ளிக்கிழமை அன்று நடத்த மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தியதற்கிணங்க, இன்று காலை 11 மணியளவில்‌ தருமபுரி வருவாய்‌ கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களைச்‌ சார்ந்த விவசாயிகளின்‌ குறைகளை தீர்ப்பதற்கான, விவசாயிகள்‌ சூறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ தருமபுரி வருவாய்‌ கோட்டாட்சியர்‌ அலுவலகத்தில்‌ […]
tn farm

You May Like