புற்றுநோய் முதல் உடல் எடை குறைப்பு வரை..!! இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்..!! சூப்பர் ரிசல்ட்..!!

Weight Loss 2025

தற்போது உள்ள கால கட்டத்தில் நாம் வயிறு நிறைய சாப்பிடுகிறோம். ஆனால், சத்தான உணவுகளை தான், சாப்பிடுகிறோமா என்பது சந்தேகம் தான். உணவே மருந்து என்பதை மறந்து கையில் கிடைப்பதை எல்லாம் சாப்பிட்டு வருகிறோம். இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் அவதிப்படுபவர்கள் லட்சக்கணக்கில் மருத்துவமனையில் செலவு செல்வது உண்டு. ஆனால், செலவே இல்லாத சத்தான உணவுகளை சாப்பிட்டு இருந்தால் இந்த குறைபாடுகளே வந்திருக்காது.


அப்படி செலவே இல்லாத அதே சமயம் புற்றுநோய், ரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவற்றை தடுக்கும் ஒரு சிறந்த பொருள் பற்றி தற்போது பார்க்கலாம். அது வெறொன்றும் இல்லை. பச்சை பயிறும்.. பாசிப் பருப்பும் தான். பச்சை பயிறு தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் பல நன்மைகளை உங்களுக்கு கிடைக்கும். பச்சை பயிறு உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவது மட்டுமின்றி, சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகளையும் சரி செய்ய பெரிதும் உதவுகிறது.

மேலும், பாசி பருப்பை உணவில் சேர்த்து வருவதால், இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு கொலஸ்ட்ரால் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அதன் அளவு குறையும். அன்றாட உணவில் பச்சை பயிறை சேர்த்து கொண்டால் போதும். ஏனென்றால் பச்சை பயற்றில் இரும்புச்சத்து வளமாக உள்ளதால், இது உடலுக்கு தேவையான அனைத்து இரும்புச்சத்தையும் கொடுத்து இரத்த சோகை ஏற்படுவதை தவிர்கிறது.

இந்த பச்சை பயறு சாப்பிடுவதால் வரும் பெரிய நன்மை, சரும புற்றுநோயில் இருந்து சிறந்த பாதுகாப்பு அளிக்கும். ஆம், ஒருவேளை நீங்கள் அன்றாடம் வெளியில் அதிகம் சுற்றுபவராக இருந்தால் உங்கள் உணவில் பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை சேர்த்து வந்தால், சரும புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும், தற்போதுள்ள அனைவரும் ஒரு பெரிய பிரச்சனை உடல் பருமனை குறைப்பது.

அதற்கு பச்சை பயறு எடுத்துக் கொண்டால் உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பெரிதும் உதவியாக இருக்கும். உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு பௌல் பச்சை பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பது மட்டும் இல்லாமல், உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.

Read More : லாபத்தை அள்ளிக் கொடுக்கும் முருங்கை சாகுபடி..!! லட்சக்கணக்கில் வருமானம் பார்க்கும் பெண்..!! சாதித்தது எப்படி..?

CHELLA

Next Post

அம்மனுக்கு பீசா, பர்கர், சமோசா படைக்கும் வித்தியாசமான கோயில்..!! எங்க இருக்கு தெரியுமா..?

Thu May 29 , 2025
அம்மனுக்கு பீசா, பர்கர் படைத்து வழிபடும் வித்தியாசமான வழிபாட்டு முறை கொண்ட கோவில் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். அம்மன் கோயில் என்றால் வழக்கமாக மாவிளக்கு, பொங்கல், பழங்கள், விரத உணவுகள் போன்றவை நைவேத்யமாக படைக்கப்படும். ஆனால் சத்தீஸ்கர் மாநில தலைநகரான ராய்பூரில் உள்ள ஒரு கோயிலில் அம்மனுக்கு பீசா, பர்கர், பாஸ்தா, சமோசா உள்ளிட்ட மேற்கத்திய உணவுகளை நைவேத்யமாக வைத்து வழிபடுகின்றனர். இது சற்றே ஆச்சர்யமாக இருக்கலாம். […]
temple 1

You May Like