மெக்சிகோ நாட்டில் உள்ள ‘டில்டெபாக்’ (Tiltepec) என்ற ஒரு சிறிய கிராமம் தற்போது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு காரணம், இக்கிராமத்தில் மனிதர்கள் முதல் விலங்குகள் வரை யார்க்கும் பார்வை இல்லை என்பதே! இது ஒரு மர்மமான கிராமம், இங்கிருக்கும் ஒருவருக்கும் பார்வை இல்லை என்பதால், இது பார்வையற்றோர் கிராமம் என்று அழைக்கப்படுகிறது.
இங்குள்ள மக்கள் அனைவரும் முழுமையாக பார்வையிழந்தவர்கள். புதிய குழந்தைகள் பிறக்கும் போது கண்கள் இயல்பாக இருக்கும், ஆனால் அவர்கள் வளர வளர பார்வை மங்கியடைய தொடங்கி, முற்றிலும் காண முடியாத நிலைக்கு மாறுகிறார்கள். இந்த அதிர்ச்சியூட்டும் தன்மையின் பின்னணியில் பல வித்தியாசமான காரணங்கள் கூறப்படுகின்றன.
இக்கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தங்கள் பார்வை கோளாறு பிரச்னைக்கு சபிக்கப்பட்ட மரமே காரணம் என நம்புகின்றனர். லாவாசுவேலா என்ற மரம் இருப்பதாகச் சொல்கிறார்கள், அதைப் பார்த்து மனிதர்கள் முதல் விலங்குகள் மற்றும் பறவைகள் வரை அனைவரும் பார்வையற்றவர்களாக மாறுகிறார்கள். இந்த மரம் பல ஆண்டுகளாக கிராமத்தில் உள்ளது. இம்மரத்தைப் பார்த்தவுடன் பார்வையற்றவராகிவிடுவதாக மக்கள் கூறுகின்றனர்.
இந்த கிராமம் அமைந்துள்ள இடத்தில் விஷ ஈக்கள் காணப்படுவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ஈக்கள் கடிப்பதால் ஒரு நபர் பார்வையற்றவராக மாறுகிறார். இது தொடர்பான தகவல் வெளியாகியதும், மெக்சிகோ அரசு இக்கிராம மக்களை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மாற்ற முயற்சி செய்தது. ஆனால், அந்த இடங்களின் காலநிலை, இம்மக்களுக்கு ஏற்றதாக இருக்கவில்லை. உடலில் மாற்றங்களை எதிர்கொள்ள முடியாததால், பலர் மீண்டும் பழைய கிராமத்தையே நாடி திரும்பியதாக கூறப்படுகிறது.
Read more: கன்னட மொழி குறித்த என் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது..!! – கமல்ஹாசன் விளக்கம்