சாலை ஓரத்தில் கடை வைத்திருப்பவர்களுக்கு சிலிண்டர் வழங்க கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சிலிண்டரின் விலை ஏறு முகத்தில் உள்ள நிலையில் சாலை ஓரத்தில் கடைகள் வைத்திருப்பவர்கள் செலவை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடுகின்றனர். இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் வரவுள்ள இந்த புதிய திட்டம் சாலை ஓரக் கடைக்காரர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது.
இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி கூறுகையில் ’’ பரிசோனை முறையில் ஒரு வாரத்தில் திருவல்லிக் கேணியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கூட்டுறவு சொசைட்டி மூலம் சிலிண்டர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2 கிலோ மற்றும் 5 கிலோ எடைகளில் சிலிண்டர் வழங்கப்படும் ’’ என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பண்டிகைக்காலம் என்பதால் எரிவாயு சிலிண்டர் ஞாயிற்றுக்கிழமையும் விநியோகிக்கப்பட உள்ளது. எனவே ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிலிண்டரை பெற்றுக்கொள்ளலாம். பெரும்பாலான எரிவாயு சிலிண்டர் முகவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் விநியோகம் செய்வதில்லை. பலருக்கு தேவை இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சமீப காலங்களில் சிலிண்டர் புக்கிங் 15 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.