காதலை முறித்துக் கொண்ட காதலி..!! கழுத்தை அறுத்த காதலன்..!! ரத்த வெள்ளத்தில் சரிந்த சோகம்..!!

காதலை முறித்துக் கொண்ட ஆத்திரத்தில் காதலியை கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் மனந்தரி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஷம்ஜித் (25). கன்னூர் மாவட்டம் வாழ்யாயில் பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் விஷ்ணுபிரியா (21). இவர் அதே பகுதியில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் பார்மசிஸ்ட்டாக பணிபுரிந்து வந்தார். விஷ்ணு பிரியாவும், ஷம்ஜித்தும் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் ஷம்ஜித்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஷ்ணுபிரியா அவருடனான காதலை முறித்துக் கொண்டுள்ளார். இதன் காரணமாக, விஷ்ணுபிரியா மீது ஷம்ஜித் ஆத்திரமடைந்துள்ளார். இந்த நிலையில், விஷ்ணுபிரியாவின் உறவினர் ஒருவர் உயிரிழந்ததால் அவரது குடும்பத்தினர் அனைவரும் அங்கு சென்றுவிட்டதால், விஷ்ணு பிரியா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

காதலை முறித்துக் கொண்ட காதலி..!! கழுத்தை அறுத்த காதலன்..!! ரத்த வெள்ளத்தில் சரிந்த சோகம்..!!

இதனை அறிந்த ஷம்ஜித், விஷ்ணுபிரியாவின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு வீட்டில் தனியாக இருந்த அவரிடம் காதலை முறித்துக் கொண்டது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ஷம்ஜித் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விஷ்ணுபிரியாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். பின்னர், ஆத்திரம் தீராத ஷம்ஜித், விஷ்ணுபிரியாவின் உடலில் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார். இந்த எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்த விஷ்ணுபிரியா, ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலில் மொத்தம் 18 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. விஷ்ணுபிரியா உயிரிழந்ததை உறுதி செய்த பின்பு, ஷம்ஜித் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான்.

காதலை முறித்துக் கொண்ட காதலி..!! கழுத்தை அறுத்த காதலன்..!! ரத்த வெள்ளத்தில் சரிந்த சோகம்..!!

வெளியூர் சென்ற விஷ்ணுபிரியாவின் குடும்பத்தினர் வீடு திரும்பிய போது, அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், விஷ்ணுபிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஷம்ஜித்தையும் கைது செய்தனர். விசாரணையில் விஷ்ணுபிரியாவை கொலை செய்ததை ஷம்ஜித் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவன் சிறையில் அடைக்கப்பட்டான்.

CHELLA

Next Post

குறைந்த வட்டியில் நகைக்கடன் வழங்கும் வங்கிகள் எது தெரியுமா..? லிஸ்ட் இதோ..!!

Sun Oct 23 , 2022
அவசரத்திற்கு உதவும் என தங்கத்தைச் சேர்த்து வைப்பது கிட்டத்தட்ட அனைத்து இந்தியக் குடும்பங்களிலும் நடக்கும் ஒன்று. தங்கத்தை வைத்து எளிதாக பணத்தை புரட்ட முடியும். வங்கிகள் இதற்கு தனிநபர் கடன் வட்டியை விட குறைந்த வட்டியில் பணம் வழங்குகின்றன. குறைந்த தங்க நகைக்கடன் வட்டி வழங்கும் 5 வங்கிகளைப் பற்றி இங்கே பார்க்கலாம். இந்தியன் வங்கி தங்கக் கடனுக்கு மிகக் குறைந்த வட்டியாக 7 சதவீதத்தை புளோட்டிங் ரேட்டாக வசூலிக்கிறது. […]
குறைந்த வட்டியில் நகைக்கடன் வழங்கும் வங்கிகள் எது தெரியுமா..? லிஸ்ட் இதோ..!!

You May Like