பெண்களே ரெடியா..? ரூ.1,000 பணத்திற்கு விண்ணப்பிக்க நாளை சூப்பர் வாய்ப்பு..!! இந்த ஆவணங்களை மறக்காமல் எடுத்துட்டு போங்க..!!

1000 2025 1

2021 சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுப்படி, 2023 செப்டம்பர் 15ஆம் தேதி, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை திமுக அரசு தொடங்கியது. அதன்படி, மாதந்தோறும் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஏற்கனவே 1.14 கோடி பெண்கள் பயன்பெற்று வரும் நிலையில், இத்திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்படுகிறது.


இதற்காக நாளை (ஜூன் 4) மாபெரும் முகாம் தமிழ்நாட்டில் நடக்கிறது. மொத்தம் 9,000 இடங்களில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இதில், இதுவரை இத்திட்டத்தில் பயன்பெறாத தகுதியுள்ள பெண்கள் உரிமைத்தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :

* ரேஷன் அட்டை

* ஆதார் அட்டை

* வங்கி கணக்கு புத்தகம்

* வாக்காளர் அடையாள அட்டை

* பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

* ரேஷன் கார்டில் தலைவன் என்ற லிஸ்ட்டில் வருபவர்களின் மனைவியாக நீங்கள் இருந்தால், இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

* கணவர்கள் இல்லாத வீட்டில் மூத்த பெண் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

* ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்திற்கு மேல் வருமானம் பெற்றால், இத்திட்டத்தின் பலன் உங்களுக்கு கிடையாது.

* வருமான வரி செலுத்துவோர் விண்ணப்பிக்க முடியாது. கார், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் வைத்திருந்தாலும் உங்களுக்கு பணம் கிடைக்காது.

* ஒரு ரேஷன் கார்டில் உள்ள ஒரு பெண்ணுக்கு மட்டுமே பணம் கிடைக்கும். இதற்காக இரண்டாவது பெண், தனி ரேஷன் வாங்கினாலும் ரூ.1,000 கிடைக்காது.

* அரசின் பென்ஷன் தொகையை வாங்கிக் கொண்டிருந்தால் கட்டாயம் உங்களுக்கு ரூ.1,000 கிடைக்காது.

* புதிதாக திருமணமாகி ரேஷன் கார்டு பெற்றவர்கள், அரசு ஊழியராக இல்லாத பட்சத்தில் அவருக்கு ரூ.1,000 வழங்கப்படும்.

Read More : “18 ஆண்டுகளாக கோப்பைக்கு ஏங்கும் 18ஆம் நம்பர்”..!! RCB vs PBKS..!! இன்று இறுதி யுத்தம்..!! நிறைவேறுமா விராட் கனவு..?

CHELLA

Next Post

தங்கம் விலை இனிமேல் இப்படி தான் இருக்கும்.. அடித்து சொன்ன ஆனந்த் சீனிவாசன்..!!

Tue Jun 3 , 2025
பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் வரும் காலத்தில் அது எப்படி இருக்கும் என்பதை விளக்கியுள்ளார். தங்கம் வாங்குவது என்பது அனைவருக்கும் ஆசையான விஷயமாக இருக்கும். எனவே, எப்போது விலை குறையும் என்ற எதிர்ப்பார்ப்பில் அனைவரும் ஆவலுடன் காத்திருப்பர். கொரோனாவுக்கு முன்பு வரை ஆபரணத் தங்கம் ரூ.3500 என்ற ரேஞ்சிலேயே இருந்தது. ஆனால், அதன் பிறகு உயரத் தொடங்கிய தங்கம் விலை அதன் பிறகே குறையவில்லை. இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநர் […]
Anand Srinivasan 1

You May Like